சாதனையின் உச்சத்திலிருந்த சரித்திரம் - கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் ஆட்சிக்காலம் - News View

About Us

Add+Banner

Thursday, August 30, 2018

demo-image

சாதனையின் உச்சத்திலிருந்த சரித்திரம் - கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் ஆட்சிக்காலம்

hafees1
அரசியல் அதிகாரத்திலிருக்கின்ற போது மக்களின் எதிர்பார்ப்புக்கு மேலாக அபிவிருத்தித் திட்டங்களையும், வேலைவாய்ப்புகளையும் வழங்கி மக்கள் மனங்களில் தடம்பதித்து நிற்கின்றவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருவராக முன்னாள் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் ZA. ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் காணப்படுகின்றார்.

முன்னாள் முதல்வரின் அதிகார காலம் தான் அபிவிருத்திப் பாதையில் போராளிகள் மனதிலும் நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தியதுடன் வேலைவாய்ப்புகளையும் பெற்றுக் கொள்ளவதற்கு வழிசமைத்தது. இதனால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் முதன்மை பெற்றிருப்பதற்கும் ஏதுவாக அமைந்தது.

மாகாணத்தின் நிதி எவ்வாறு முழுமையாக அபிவிருத்தி நிகழ்வுக்காக பயன்படுத்தப்பட்டிருந்ததோ அதனை போன்று மத்திய அரசு நடைமுறைப்படுத்திய பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் கிழக்கு மாகாண சபை பெற்றுக் கொள்ளவதற்கு தனது ஆளுமையால் வழிவகுத்தார். இதனால் கிழக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு கிராமங்களும் ஒவ்வொரு நாட்களும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

கிழக்கு மாகாணத்தின் அரச அலுவலகம் எல்லாம் பம்பரமாக இயங்க வேண்டி இருந்தது. மக்கள் தங்களது தேவைகளை நொடிப் பொழுதில் நிறைவேற்றினர். காலதாமதம் என்ற பேச்சுக்கு இடம் கொடுக்கப்படவில்லை. இதனால் கிழக்கு மாகாணத்தின் அதிகாரத்தில் கீழிருந்த அனைத்துறைகளும் ஒரே நேரத்தில் அபிவிருத்திப் பாதையில் கால்பதித்திருந்தது.

அதனைப்போன்று கல்வி, விளையாட்டு, விவசாயம், சுகாதாரம், சுற்றுலாத் துறை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிலும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இளைஞர்கள் உள்வாங்கப்பட்டனர் இதனால் பலரின் அரச தொழில் என்ற கனவு நிறைவேற்றப்பட்டது. 

இவ்வாறு உயிரோட்டமான செயற்பாடுகளில் இருந்ததாலே எண்ணமோ இன்று கிழக்கு மாகாணம் வேலை வாய்ப்புகளிலும் அபிவிருத்திகளிலும் புறம் தள்ளப்படுகின்றபோது முன்னாள் முதலமைச்சர் ZA. ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களின் அதிகார காலம் இருந்து இருக்கக்கூடாதா என்ற அங்கலாய்ப்பு எல்லோர் மனங்களிலும் உருவாகின்றது. இதுவே முன்னாள் முதல்வரின் நேர்த்தியான ஆட்சிக்கு சான்றாக அமைகின்றது.

இவ்வாறு அதிகார காலத்தில் பல்வேறு சேவைகளை செவ்வனே செய்து காட்டிய முன்னாள் முதல்வரின் காலம் முடிவடைந்து சுமார் ஒரு வருடத்தை அண்மிக்கின்ற போதிலும் கிழக்கு மாகாணத்தில் ஒரு கல்விக் கூடத்தின் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றதனையோ பாடசாலை பணியாளர்கள் நியமிக்கப்பட்டதனையோ காண முடியவில்லை இவ்வாறான ஒரு நிலைதான் இன்று கிழக்கு மாகாணத்தின் அதிகாரத்தில் உட்பட்ட ஒவ்வொரு துறையிலும் அவதானிக்க முடிகின்றது.

இதனைப் போன்று முதல்வரின் காலத்தில் மத்திய கல்வி அரசு வழங்குகின்ற வேலைவாப்புகளிலும் கட்டுமான பணிகளும் சமபங்கு கிழக்கு மாகாணத்திற்கு கிடைக்கின்ற போதெல்லாம் ஏரூர், கல்குடா பல்வேறு வரப்பிரசாதங்களை அனுபவித்து இருந்த போதிலும் தற்போது மத்திய கல்வி அமைச்சு வழங்கிய பாடசாலை பணியாளர் நியமனத்தில் பிரதி அமைச்சர் அமீர் அலி நியமித்த ஒருவரை தவிர வேறு யாரும் நியமிக்கபட்டதாக தரவுகள் இல்லை இவ்வாறுதான் இன்று கிழக்கு மாகாணமும் குறிப்பாக ஏறாவூரும் கல்குடாவும் ஏமாற்றம் அடைகின்றது.

முன்னாள் முதல்வர் காலத்தின் பல்வேறு துறைகளின் அபிவிருத்தியில் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பில் கிழக்கு மாகாணம் சாதனையின் உச்சத்தில் இருந்தது சரித்திரம்.

SIM.நிப்ராஸ்

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *