மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர்களுக்கான சிங்கள மொழிப் பயிற்சி - News View

About Us

About Us

Breaking

Thursday, August 30, 2018

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர்களுக்கான சிங்கள மொழிப் பயிற்சி

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சினால் நாடு முழுவதும் மொழிப்பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு பல்வேறு செயற்திட்டங்கள் அமுல் படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சுகாதாரத்துறையில் மக்கள் எதிர்கொள்ளும் மொழிப்பிரச்சினையை மட்டுப்படுத்தும் பொருட்டு தாய் மொழி சிங்களத்தை கொண்டவர்களுக்கு தமிழ் மொழிப்பயிற்சியும், தாய் மொழி தமிழாக கொண்டவர்களுக்கு சிங்கள மொழியையும் போதிக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் பிரகாரம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட சுகாதார துறைசார் ஊழியர்கள் குழுவினருக்கு தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும் (NILET), சுகாதார அமைச்சும் இணைந்து Orient Academy ஊடாக சிங்கள மொழிப் பயிற்சியை வழங்கி இருந்தது.
குறித்த பயிற்சியை பூர்த்தி செய்த மாணவர்களின் சிங்கள மொழியிலான கலை நிகழ்வுகள் மட்டக்களப்பு தாதிய கல்லூரியில் கடந்த வாரம் இடம் பெற்றது.

இதில் பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் அலி சாஹிர் மௌலானா கலந்து கொண்டார்.

அத்துடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. திருமதி கலாரஞ்சனி கணேசலிங்கம், சுகாதார அமைச்சின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் Dr. திருமதி மஹேஷிக்கா, Orient Academy பணிப்பாளர் கபில கிராகம, தாதிய கல்லூரி முதல்வர் திரு. AMT. அதிகாரி , Orient Academy இணைப்பாளர் திரு தேசப்பிரிய ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment