உலக பாரம்பரிய சின்னமாக 11 மராட்டிய கோட்டைகள் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 13, 2025

உலக பாரம்பரிய சின்னமாக 11 மராட்டிய கோட்டைகள்

ம​கா​ராஷ்டி​ரா​வின் 11 மராட்டிய கோட்​டைகளை, உலக பாரம்​பரிய சின்​னம் பட்​டியலில் யுனெஸ்கோ சேர்த்​துள்​ளது.

உலகம் முழு​வதும் பழங்​கால கட்​டிடங்​களை ஆய்வு செய்து உலக பாரம்​பரிய சின்​ன​மாக யுனெஸ்கோ அறி​வித்து வரு​கிறது. 

அதன்​படி மகா​ராஷ்டிர மாநிலத்​தில் ஆட்சி செய்த மராட்​டிய மன்​னர் சத்​ரபதி சிவாஜி ஆட்சி செய்த 11 கோட்​டைகள் மற்​றும் தமிழ்​நாட்​டில் உள்ள செஞ்சி கோட்டை என மொத்​தம் 12 கோட்​டைகளை உலக பாரம்​பரிய சின்​ன​மாக அறிவிக்க வேண்​டும் என்று மத்​திய அரசு பரிந்​துரை செய்​திருந்​திருந்​தது.

இந்​நிலை​யில், பாரிஸ் நகரில் 47ஆவது உலக பாரம்​பரிய சின்​னம் தொடர்​பான கமிட்டி கூடி, பல்​வேறு நாடு​கள் பரிந்​துரைத்த சின்னங்கள் குறித்து ஆய்வு நடத்​தின. 

முடி​வில் இந்​தி​யா​வின் மராட்டிய ராணுவ நிலப்​பரப்பை வெளிப்​படுத்தும் 11 கோட்​டைகள் மற்​றும் தமிழகத்​தின் செஞ்சி கோட்டையை உலக பாரம்​பரிய சின்​ன​மாக யுனெஸ்கோ அறிவித்தது.

மகா​ராஷ்டி​ரா​வில் மராட்​டியர்​கள் ஆட்சி காலத்​தில் இராணுவத்தை பலப்​படுத்​தும் வகை​யில் பல இடங்​களில் பாது​காப்​பான கோட்டைகள் கட்​டப்​பட்​டுள்​ளன. அவை 17ஆம் நூற்​றாண்​டில் இருந்து 19ஆம் நூற்​றாண்டு கால கட்​டத்​தில் மலை, கடலோரம், நிலம் என பல இடங்​களில் கட்​டப்​பட்​டுள்​ளன. இவை ஒவ்​வொன்​றும் மராட்​டிய மன்​னர்​களின் ராணுவத் திறனை வெளிப்​படுத்​துகின்​றன.

மராட்​டிய சாம்​ராஜ்ஜி​யத்தை பாது​காக்​க​வும், வர்த்தக வழித்​தடத்தை கட்​டுப்​பாட்​டுக்​குள் வைத்​துக் கொள்​ள​வும் இந்த கோட்​டைகள் கட்டப்பட்​டுள்​ளன. 

மகா​ராஷ்டி​ரா​வில் சால்ஹேர், ஷிவ்னேரி, லோஹகட், கான்தேரி, ராய்கட், ராஜ்கட், பிரதாப்கட், ஸ்வர்ணதுர்க், பன்ஹாலா, விஜயதுர்க், சிந்துதுர்க் ஆகிய கோட்​டைகளை மராட்​டியர்​கள் கட்​டி​யுள்​ளனர். அத்துடன் தமிழ்​நாட்​டில் உள்ள செஞ்சி கோட்​டை​யும் தற்​போது உலக பாரம்​பரிய சின்​னம் பட்​டியலில் இடம்​பிடித்​துள்​ளது.

இந்​தக் கோட்​டையை சில காலம் மராட்​டிய மன்​னர் சத்​ரபதி சிவாஜி தனது கட்​டுப்​பாட்​டில் வைத்​திருந்​தார். எதிரி​களின் படையெடுப்​பில் இருந்து பாது​காத்​துக் கொள்ள இயற்​கையை பயன்​படுத்​திக் கொள்ளும் புத்​தி​சாலித்​தனம், நீர் தேக்க அமைப்​பு​கள், வலிமை​யான சுவர்​கள் போன்​றவற்​றுடன் பலத்த பாது​காப்​புடன் மராட்​டிய கோட்டைகள் கட்​டப்​பட்​டுள்​ளன. இவை எல்​லாம் மராட்​டியர்​களின் இராணுவ திறமையை இன்​றும் பறை சாற்றி வரு​கின்​றன.

இது குறித்து யுனெஸ்கோ கூறுகை​யில், ‘‘2024-25ஆம் ஆண்டு உலக பாரம்​பரிய சின்​னம் பட்​டியலில் சேர்க்க இந்​திய அதி​காரி​கள் முழு முயற்​சி​யுடன் ஆதா​ரங்​களை சமர்ப்​பித்​தனர். இந்​திய கோட்​டைகளின் வரலாறு, கலாச்​சார ஆதா​ரங்​களை முன்வைத்​தனர். அவற்றின் முக்​கி​யத்​து​வத்தை சமர்ப்​பித்​தனர். அவற்றை எல்​லாம் ஆய்வு செய்த பிறகு இந்​திய கோட்​டைகளுக்கு அங்​கீ​காரம் அளிக்கப்பட்​டது. 

இந்த அங்​கீ​காரம் இந்​தி​யா​வின் கோட்டை பாரம்​பரி​யத்​துக்கு உலகளா​விய முக்​கி​யத்​து​வத்தை அளிக்​கிறது. அத்​துடன், இந்த கோட்​டைகளை தொடர்ந்து பாது​காப்​ப​தற்கு மதிப்​பளிக்​கிறது’’ என்று தெரிவித்​துள்​ளது.

யுனெஸ்​கோ​வின் அங்​கீ​காரத்​துக்கு இந்​திய வரலாற்று ஆய்வாளர்கள், பாரம்​பரிய நிபுணர்​கள், அரசு அதி​காரி​கள் வரவேற்பு அளித்​துள்​ளனர். 

யுனெஸ்​கோ​வின் முடிவு இந்​திய சுற்​றுலா துறைக்கு ஊக்​கமளிக்​கும். உள்​ளூர் மக்​களுக்கு பெருமை தேடித் தரும். அத்​துடன் வரலாற்று சிறப்​புமிக்க அந்​தப் பகு​தி​களை இன்​னும் முறை​யாக பராமரித்​து பாது​காக்​க வேண்​டும்​ என்​ப​தை உறு​திப்​படுத்​தும்​ என்​று தெரிவித்துள்​ளனர்​.

No comments:

Post a Comment