கட்டாய ஜனாஸா எரிப்பு : விசாரணைகளை ஆரம்பித்த சி.சி.டி. - News View

About Us

Add+Banner

Thursday, January 23, 2025

demo-image

கட்டாய ஜனாஸா எரிப்பு : விசாரணைகளை ஆரம்பித்த சி.சி.டி.

6
கட்­டாய ஜனாஸா எரிப்பு குறித்து குற்­ற­வியல் விசா­ர­ணைகள் ஆரம்பிக்­கப்­பட்­டுள்­ளன. 

கொரோனா தொற்றால் உயி­ரி­ரி­ழந்­த­வர்­களின் ஜனா­ஸாக்­களை கட்டாய தகனம் செய்த நட­வ­டிக்­கையின் பின்னால் உள்ள சதியை வெளிப்­ப­டுத்­தவும், இன­வாத நோக்­கங்­களை கண்­ட­றிந்து நீதியை நிலை­நாட்­டு­மாறும் கோரி பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்­யப்­பட்­டது.

மனித உரி­மைகள் செயற்­பாட்­டாளர் சிரந்த ரன்மல் என்­டனி அமரசிங்க இந்த முறைப்­பாட்டை கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி பதிவு செய்­துள்ளார்.

இந்த முறைப்­பாடு பதில் பொலிஸ்மா அதிபர் பிரி­யந்த வீரசூரியவினால், விசா­ர­ணை­க­ளுக்­காக கொழும்பு சி.சி.டி. எனும் கொழும்பு குற்­றத் ­த­டுப்புப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் இந்­திக லொக்­கு­ஹெட்­டி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. 

அதன்­படி அவரின் கீழ் இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்ள நிலையில், நேற்று முறைப்­பாட்­டா­ள­ரான மனித உரி­மைகள் செயற்பாட்­டாளர் சிரந்த ரன்மல் என்­டனி அம­ர­சிங்­க­விடம் வாக்கு மூலம் பதிவு செய்­யப்பட்­டுள்­ளது.

கொரோனா தொற்றின் முதல் முஸ்லிம் மரணம் பதி­வான 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 முதல் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை, கொரோ­னாவால் உயி­ரி­ழந்த முஸ்­லிம்­களின் ஜனாஸாக்கள் கட்­டாய தக­னத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது. 

இந்த கட்­டாய நட­வ­டிக்­கை­யா­னது, ஒரு திட்­ட­மிட்ட சதியின் வெளிப்பாடு என்று சந்­தே­கிக்­கப்­படும் நிலையில், அதனை வெளிப்படுத்­திக்­ கொள்ள இவ்­வி­சா­ர­ணைகள் முன்னெடுக்கப்பட்டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

பொலிஸ் தலை­மை­ய­கத்தில் செய்­யப்­பட்ட இந்த குற்­ற­வியல் நடவடிக்கை கோரும் முறைப்­பாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திக­தி­யாகும்போது சுகா­தார அமைச்­ச­ராக இருந்த பவித்ரா வன்னி ஆரச்சி, அதே காலப்­ப­கு­தியில் சுகா­தார அமைச்சின் செயலாளர், சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் ஆகி­யோரும் 2021.02.14 அன்று சுகா­தார அமைச்சின் செய­லா­ள­ராக இருந்­தவர், கொரோ­னாவால் உயி­ரி­ழந்­த­வர்­களின் சட­லங்­களை தகனம் செய்வது தொடர்பில் முடி­வெ­டுத்த தொழில்­நுட்பக் குழுவின் உறுப்பி­னர்கள், கொரோ­னாவால் உயி­ரி­ழந்­த­வர்­களை தகனம் செய்ய வேண்டும் என முடி­வுக்குவர கார­ண­மாக இருந்த நிபு­ணர்கள் குழுவில் இருந்தோர் (சட்ட வைத்­திய ஆலோ­சகர் சன்ன பெரேரா, வைத்­திய ஆலோ­சகர் ஆனந்த விஜே­விக்­ரம, சட்ட வைத்­திய ஆலோசகர் ரொஹான் ருவன்­புர, சட்ட வைத்­திய ஆலோ­சகர் பி.பீ. தசநா­யக்க, நுண்­ணு­யி­ரியல் ஆலோ­சகர் ஷிரானி சந்­ர­சிறி, நுண்ணுயி­ரியல் ஆலோ­சகர் மாலிக கரு­ணா­ரத்ன, வைத்­தியர் துல்மினி குமா­ர­சிங்க, சட்ட வைத்­திய ஆலோ­சகர் பிரபாத் சேனசிங்க, சட்ட வைத்­திய அதி­காரி சிரி­யந்த அம­ர­ரத்ன, பேராசிரியர் மெத்­திகா விதா­னகே, வைத்­தியர் ஹசித்த திசேரா) ஆகியோரை பொறுப்புக்கூற வேண்­டி­ய­வர்கள் என பெய­ரிட்டு குற்றவியல் விசா­ரணை கோரி­யுள்ளார்.

குறிப்­பாக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி தொடர் தாக்­கு­தலின் பின்னர் முஸ்­லிம்கள் மீதான இன­வாத அடக்­கு­முறை, அரச அங்கீகாரத்­தோடு வியா­பித்­த­தாக குறித்த முறைப்­பாட்டில் சுட்டிக்கட்டியுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சிரந்த ரன்மல் என்டனி அமரசிங்க, அதன் தொடர்ச்சியே கொவிட் தொற்றினால் மரணமடைந்த ஜனாஸாக்களை தகனம் செய்த நடவடிக்கை எனவும், அது முற்றுமுழுதாக முஸ்லிம்களை இலக்கு வைத்தது எனவும் சுட்டிக்கட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Vidivelli

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *