உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி : சின்னம் தொடர்பில் தீர்மானம் இல்லை என்கிறார் ரவூப் ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 23, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி : சின்னம் தொடர்பில் தீர்மானம் இல்லை என்கிறார் ரவூப் ஹக்கீம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் தனித்து போட்டியிடவுள்ள­தாக அக் கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

மேல் மற்றும் மத்­திய மாகாண கட்­சியின் மத்­திய குழுவும் தனித்து போட்­டி­யி­டவே விரும்பம் தெரி­வித்­துள்­ளன. எனினும், எந்த சின்னத்தில் போட்­டி­யி­டு­வது குறித்து தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர் மேலும் தெரி­வித்தார்.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் நடத்­தப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கட்­சியின் நிலைப்­பாடு குறித்து விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

மேலும் தெரி­விக்­கையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி தேர்­த­லின்­போது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் தனித்து போட்­டி­யி­ட­வுள்­ளது. 

அத்­தோடு, மத்­திய மாகா­ணத்­திலும் மேல் மாகா­ணத்­திலும் அண்மையில் இடம்­பெற்ற மத்­திய குழு கூட்­டத்­தின்­போது தனித்து போட்­டி­யி­டு­வ­தற்கு விருப்பம் தெரி­விக்­கப்­பட்­டது. ஏனைய பகுதிகளிலும் மத்­திய குழுக் கூட்­டத்தில் எடுக்­கப்­படும் தீர்மானத்திற்கு அமை­வாக முஸ்லிம் காங்­கிரஸ் உள்­ளூ­ராட்சி தேர்தலுக்கு முகம்கொடுக்கும்.

எது எவ்­வா­றா­யினும் உள்­ளூ­ராட்சி தேர்­தலில் தனித்து மரச் சின்னத்தில் போட்­டி­யி­டு­வதா அல்­லது வேறு சின்­னங்­களில் போட்டியி­டு­வதா என்­பது குறித்த தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை. இது இறுதி நேரத்தில் உயர்­பீ­டத்தின் தீர்­மா­னத்­திற்கு அமை­வாக எடுக்கப்படும்.

அத்­துடன், கூட்­டணிக் கட்­சிகள் ஆட்­சியை கைப்­பற்­று­வ­தற்கு வியூகமமைத்து சரியான ஆசன பங்கீடுகள் குறித்த இணக்கப்பாடுகள் ஏற்படுமிடத்து நாம் சில நெகிழ்வுப் போக்குடன் செயற்படவும் தயாராக இருக்கிறோம் என்றார்.

Vidivelli

No comments:

Post a Comment