ஊழியர் சேமலாப நிதியத்தில் 3,912.3 பில்லியன் ரூபா இருப்பு : வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட மாட்டாது - News View

About Us

Add+Banner

Saturday, June 8, 2024

demo-image

ஊழியர் சேமலாப நிதியத்தில் 3,912.3 பில்லியன் ரூபா இருப்பு : வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட மாட்டாது

24-662e41f232dd3
2024 பெப்ரவரி மாதம் நிறைவடையும்போது ஊழியர் சேமலாப நிதியத்தில் 3,912.3 பில்லியன் ரூபா இருப்பு காணப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதி திணைக்களத்தின் மூலம் அந்த நிதியத்தின் 1958/15 ஆம் இலக்க சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு உட்பட்ட அலுவல்களுக்கு மட்டும் அதனை பயன்படுத்துவதற்கும் வேறு வேலைத் திட்டங்களுக்கு அந்த நிதி பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி மயந்த திசாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேவேளை, ஊழியர் சேமலாப நிதிக்கு பங்களிப்பு செய்வோர், ஊழியர் சேமலாப நிதி மற்றும் அதற்கான தனியார் துறை ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பில் தனித்தனியாக உடனடியாக விபரங்களை தெரிவிக்க முடியாதுள்ளதாகவும் அவர் தமது பதிலின் போது குறிப்பிட்டார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *