சீரற்ற காலநிலையால், அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களான ஹர்சன ராஜகருணா, மரிக்கார் போன்றோர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அனர்த்தங்களின் பாதிப்புக்களை மதிப்பீடு செய்வதற்கு மேலும் சில வாரங்கள் தேவைப்படுவதாக சபையில் சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் முடியுமான அளவில் இழப்பீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
இவ்விடயத்தில், சண்டித்த்தனத்துக்கும் துஷ்பிரயோகத்துக்கும் இடமளிக்க முடியாது என்றும், சண்டித்தனத்துக்கு ஒருபோதும் அரசாங்கம் பயப்படப்போவதில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் உறுதியாகத் தெரிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment