உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய வலையமைப்பு இந்த அரசாங்கத்துக்குள்ளும் செயற்பட்டு வருகிறது - சபையில் சுட்டிக்காட்டிய முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 10, 2025

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய வலையமைப்பு இந்த அரசாங்கத்துக்குள்ளும் செயற்பட்டு வருகிறது - சபையில் சுட்டிக்காட்டிய முஜிபுர் ரஹ்மான்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட வலையமைப்பு இந்த அரசாங்கத்துக்குள் இன்னும் செயற்பட்டு வருகிறது. சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அங்கிருந்தவர்களில் ஒரு சிலர் உயிர் தப்பியிருந்தனர். அவர்களில் சஹ்ரானின் மனைவி ஒருவர். அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும்போது, சாராவை ஒருவர் துக்கிச் செல்வதை கண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் சாராவை யார் தூக்கிச் சென்றார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்றால், மேஜர் சுபசிங்கவிடம் கேளுங்கள். அப்போது கிழக்கு மாகாண கட்டளைத் தளதியாக இருந்தவர் அரசாங்கத்தின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுர ஜயசேகர என்று ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான சபை ஒத்துவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரு சதித்திட்டம். அரசின் ஒரு பகுதியினர் இந்த சம்பவத்துடன் இருந்துள்ளனர். அதனால் இந்த தாக்குதலின் சூத்திரதாரிகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற விடயத்தில் நாங்களும் அரசாங்கமும் ஒரு நிலைப்பாட்டிலே இருக்கிறாேம். இதில் மாற்றுக்கருத்து இல்லை.

இந்த தாக்குதலுக்கு பின்னால் இருந்த அரசுக்குள் இருந்தவர்களை கண்டுபிடிப்பதாக தேர்தல் காலத்தில் நாங்களும் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தோம். ஜனாதிபதியும் வாக்குறுதியளித்திருந்தார். என்றாலும் மக்கள் இந்த தாக்குதலின் சூத்திரதாரியை கண்டுபிடிக்கும் பொறுப்பை இந்த அரசாங்கத்துக்கு வழங்கினார்கள். ஆனால் அரசாங்கம் இந்த தாக்குதலின் சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாக தெரிவித்தபோதும் அதனை மேற்கொள்ளவில்லை.

ஆனால் கர்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகையின் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

அப்போது, அரசினால் அரசாங்கத்தை விசாரணை மேற்கொள்ளும் கடினமான சவாலுக்கு முகம்கொடுத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்த தாக்குதலுக்கு அரசு சம்பந்தப்படிருப்பதை அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னரே தெரியும். அதனை தெரிந்துகொண்டே ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டார்.

அதனால் இந்த தாக்குதல் தொடர்பில் அரசுக்குள் விசாரணை மேற்கொண்டு, சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம். எதிர்க்கட்சியில் இருக்கும்போது ஒரு சிலரின் பெயரை குறிப்பிட்டு, இவர்கள் இந்த தாக்குதலுக்கு சம்பந்தம் என தெரிவித்தார்.

அரசு சஹ்ரானுக்கு உதவி செய்தார்கள் என்பது ஜனாதிபதிக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும். சூத்திரதாரியை கண்டுபிடிப்பதாகவே கோட்டாபய ராஜபக்ஷ்வும் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் அதனை செய்வதற்கு பதிலாக விசாரணை செய்து வந்த அதிகாரிகள் 700 பேர் வரையானவர்களை இடமாற்றினார். ஷானி அபேசேகரவை சிறையில் அடைத்தார். ரவி செனவிரத்னவை வீட்டுக்கு அனுப்பினார்.

இவ்வாறு செய்துவிட்டு ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ரிஷாத் பதியுதீன் போன்றவர்களுக்கு எதிராக பொய் வழக்கு தொடுத்தார். அதனால்தான் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த அரசாங்கத்தை தோற்கடித்து, இந்த அரசாங்கத்துக்கு அதிகாரத்தை வழங்கினார்கள். அதனால் ஜனாதிபதி கர்தினாலுக்கு முன்னால் சென்று தினறாமல் எடுத்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோரை தேர்தல் மேடையில் ஏற்றி, தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க முடியுமானவர்கள் எங்களுடன் இருப்பதாகவே பிரசாரம் செய்தார்கள். தற்போது அரசில் இருந்த ஒரு சிலரை விசாரிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்து வருகிறார்.

அதேபோன்று சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அங்கிருந்தவர்களில் ஒரு சிலர் உயிர் தப்பியிருந்தனர். அவர்களில் சஹ்ரானின் மனையும் ஒருவர். அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும்போது, சாராவை ஒருவர் துக்கிச் செல்வதை கண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் சாராவை யார் தூக்கிச் சென்றதை அறிந்துகொள்ள வேண்டும் என்றால் மேஜர் சுபசிங்கவிடம் கேளுங்கள். அப்போது கிழக்கு மாகாண கட்டளைத் தளதியாக இருந்தவர் அரசாங்கத்தின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுர ஜயசேகர. அதனால் சாராவை எங்கு அழைத்துச் சென்றார்கள் என்பதை தற்போது கேளுங்கள். சாரா உயிருடன்தான் இருக்கிறார்.

சாரா மரணித்துள்ளார் என தெரிவிப்பதற்கு கடந்த அரசாங்கம் முயற்சித்து வந்தது. அதற்காக மூன்று தடவை டீ.என்.ஏ. பரிசோதனை நடத்தினார்கள். இரண்டு பரிசோதனைகளிலும் சாரா உயிரோடு இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டது. ஆனால் சாரா உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கும் பொய் பரிசோதனை அறிக்கையை பெறுவதற்கு சென்றவர்தான் தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் விக்ரமரத்ன. அவருடன் யார் சென்றார் என்பதை விக்ரமரத்னவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதாவது இந்த தாக்குதலுக்கு சம்பந்தப்பட்ட வலையமைப்பு இந்த அரசாங்கத்துக்குள் இன்னும் செயற்பட்டு வருகிறது.

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் போரா இனத்தவர்களின் மத நிகழ்வொன்று பம்பலப்பிட்டியவில் இடம்பெற்றது. அங்கு ஒருவர் சென்று படம் பிடித்தார். அதன்போது அவரை அங்கிருந்த பொலிஸார் கைது செய்து பம்பலப்பிடிய பொலிஸுக்கு கொண்டு சென்று விிசாரணை மேற்கொண்டபோது, அவர்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின்போது, சஹ்ரானின் குழுவில் இருந்த பொடி சஹ்ரான் என்ற ஒருவர்.

அவர்தான் சொனிக் சொனிக் உடன் செயற்பட்டு. ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு மின்னஞ்சல் அனுப்பியவர். இவர் தற்போது நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலே பாேரா இனத்தவர்களின் விாழவுக்கு சென்று அங்கு படம்பிடித்துள்ளார். அவர் கடந்த மாதம் 28ஆம் திகதி கைது செய்யப்பட்டு இந்த மாதம் முதலாம் திகதி விடுவிக்கப்படுகிறார். எப்படி அவ்வாறு செய்ய முடியும்.

ஆனால் கையடக்க தொலைபேசியில் இஸ்ரேலுக்கு எதிரான படம் ஒன்றை வைத்திருந்த குற்றத்துக்காக மாவனெல்லையைச் சேர்ந்த சுஹைல் என்ற இளைஞன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு் கடந்த 9 மாதங்களாக சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்.

குறித்த இளைஞன் விமான பயிற்சியை முடித்து, கடந்த ஜனவரி மாதம் அவரின் பட்டமளிப்பு விழா இருந்தது அதற்கும் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. குறித்த இளைஞன் தற்போது போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுடனே சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். மிகவும் வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இஸ்ரேலுக்கு எதிரான படம் கையடக்க தொலைபேசியில் இருந்தமைக்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு எமது நாட்டில் இருக்கும் பொலிஸார் இஸ்ரேலின் மொசாடா என கேட்கிறேன். பொடி சஹ்ரானை எந்த பிரச்சினையும் இல்லாமல் விடுவிக்கிறார்கள். இதன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வலையமைப்பு அரசுக்குள் இன்னும் செயற்படுகிறது என்பது தெளிவாகிறது.

அதேபோன்று அபூ ஹிந் யார்? இந்தியாவின் ராே அமைப்பு இலங்கையின் புலனாய்வுடன் பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வந்தது. அப்போது இந்தியாவின் ராே அமைப்பு இலங்கையின் புலனாய்வு அதிகாரி ஒருவரை அறிமுகப்படுத்தியது அபூஹிந் என்றாகும். யார் அந்த அபூஹிந் என்பதை தற்போது அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment