12 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் பறிமுதல் : 4 பெண்கள் உள்ளிட்ட ஐவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது - News View

About Us

Add+Banner

Breaking

  

Wednesday, September 27, 2023

demo-image

12 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் பறிமுதல் : 4 பெண்கள் உள்ளிட்ட ஐவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Illegally-Smuggled-Gold-Biscuit-Jeweellery
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 6 கிலோ கிராம் நிறை கொண்ட 30 தங்க பிஸ்கட்டுகளுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கடத்திய 4 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 5 பேரும் டுபாயிலிருந்து இன்று 27 ஆம் திகதி இரண்டு விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இன்று (27) முற்பகல் துபாயில் இருந்து இலங்கை வந்த FZ 569 மற்றும் UL 226 ஆகிய விமானங்களில் பயணித்த 5 பயணிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர், சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

டுபாயிலிருந்து இன்று (27) அதிகாலை 1.10 மணிக்கு வருகை தந்த முதலாவது விமானத்தில் 3 பெண்களும் ஒரு ஆணும் வருகை தந்துள்ளதுடன் அதிகாலை 5.25 மணிக்கு வந்த விமானத்தில் பெண்ணொருவர் வருகை தந்துள்ளார்.

இவர்கள் அனைவரும் கொழும்பு பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்பதுடன் அடிக்கடி விமானங்களில் பயணிக்கும் வர்த்தகர்கள் குழுவென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

6 கிலோ எடையுள்ள நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகளை உடலிலும், பயணப் பொதிகளிலும் மறைத்து வைத்திருந்தபோது, சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட 5 பேரையும் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *