A/L பரீட்சை எழுதும் மாணவருக்கு கல்வி கற்ற பாடசாலையிலேயே தொழிற்பயிற்சி - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த - News View

About Us

Add+Banner

Breaking

  

Thursday, August 3, 2023

demo-image

A/L பரீட்சை எழுதும் மாணவருக்கு கல்வி கற்ற பாடசாலையிலேயே தொழிற்பயிற்சி - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

362972260_832571651556240_3116624907716975941_n%20(Custom)
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு இம்முறை தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சை நிறைவடைந்தவுடன், ஆறு மாத காலம் தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இப்பயிற்சிகள் மாணவர்கள் கல்வி கற்ற பாடசாலையிலேயே வழங்கப்படும். இத்திட்டம், 2024 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கடுவெல போமிரியவில் நேற்று (03) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வருடம் நவம்பர் (27) தொடக்கம் டிசம்பர் (21) வரை நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைக்கு தோற்றும் இரண்டு இலட்சத்து பத்தாயிரம் மாணவ, மாணவிகள் உள்ளனர். 

இவர்களுக்கு அடுத்த வருடத்திலிருந்து தொழிற்பயிற்சி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழி என்பன அந்தந்த பாடசாலைகளிலேயே கற்பிக்கப்படுமென்றார்.

அத்துடன், சாதாரண தர பரீட்சைக்காக வருடந்தோறும் மூன்று இலட்சத்து முப்பதாயிரம் பேர் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இதன் பின்னர் தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழி மற்றும் அவரவர் விரும்பிய தொழிற்பயிற்சிகளை வழங்கவும் சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்படும்.

இந்நோக்கில் நாடு முழுவதும் 320 முன்னோடித் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த கடுவல போமிரிய தேசிய பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே, இதனை தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *