சட்டபூர்வ வலிதாரர் இன்றி நடைபெறும் திருமணங்கள் செல்லுபடியற்றதாகிவிடும் : மேன்முறையீட்டு மனு விசாரணையில் காதி நீதிபதிகள் சபை தீர்ப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, May 30, 2025

சட்டபூர்வ வலிதாரர் இன்றி நடைபெறும் திருமணங்கள் செல்லுபடியற்றதாகிவிடும் : மேன்முறையீட்டு மனு விசாரணையில் காதி நீதிபதிகள் சபை தீர்ப்பு

சட்­ட­பூர்­வ­மான வலி­தா­ரர்கள் இன்றி நடை­பெ­று­கின்ற திரு­ம­ணங்கள் செல்­லு­ப­டி­யற்­ற­தா­கி­விடும் என காதி­ நீ­தி­ப­திகள் சபை தீர்ப்பளித்துள்­ளது.

பாணந்­துறை காதி­ நீ­தி­மன்­றத்தில் வழங்­கப்­பட்ட தீர்ப்­பொன்றை ஆட்­சே­பித்து அளிக்­கப்­பட்ட மேன்­மு­றையீடு குறித்­த­தான விசாரணை­க­ளை­ய­டுத்தே கடந்­த ­வாரம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்­ளது.

பாணந்­து­றையைச் சேர்ந்த விண்­ணப்­ப­தா­ர­ரான மணப் பெண் ஒருவர் காதி நீதி­மன்­றுக்கு தனது தந்தை தனது திரு­ம­ணத்தை தடுப்ப­தாக முறைப்­பாடு ஒன்­றினை செய்­தி­ருந்தார். 

1951 ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தின் ஏற்பாடு­களின் பிரிவு 47 இன் கீழ் செய்­யப்­பட்ட இம்­மு­றைப்­பாட்­டினை விசா­ரித்த பாணந்­துறை காதி நீதி­பதி “குறித்த திரு­ம­ணத்­திற்கு குறித்த மண­ம­களின் தந்தை வலி­தா­ர­ராக இருக்க வேண்­டிய அவசிய­மில்லை” என 03.01.2023 அன்று தீர்ப்­பொன்றை வழங்கியிருந்தார்.

காதி நீதி­ப­தியின் தீர்ப்பில் அதி­ருப்தி அடைந்த பிர­தி­வா­தி­யா­கிய தந்தை காதிகள் சபைக்கு மேன்­மு­றை­யீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்­தி­ருந்தார். 

இம்மேன்­மு­றை­யீட்டு மனு காதிகள் சபையின் தவி­சாளர் என்.எம்.எம். பிஷ்ருல் அமீன் மற்றும் ஏனைய உறுப்­பி­னர்­க­ளான எம்.எல்.எம்.எச்.மொஹிடீன் ஹுசைன் மற்றும் எம்.ரபீக் இஸ்­மாயில் முன்­னி­லையில் விவா­தத்­திற்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது. 

இரு ­த­ரப்­பி­ன­ராலும் முன்­வைக்­கப்­பட்ட வாய்­மொழி வாதங்­க­ளையும் எழுத்­து ­மூல சமர்ப்­ப­ணங்­க­ளையும் சீர்­தூக்கிப் பார்த்து காதிகள் சபை கடந்த 24.05.2025 அன்று மேற்­கு­றித்த தீர்ப்பினை வழங்­கி­யது.

குறித்த தீர்ப்பில் பின்­வரும் விட­யங்­க­ளையும் காதிகள் சபை விரிவாக சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

“முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தின் ஏற்­பா­டு­களின் அடிப்படையில் ஷாபி பிரிவைச் சேர்ந்த முஸ்லிம் திரு­மணம் ஒன்றின் வலி­தாந்­தன்­மைக்கு சட்­ட­பூர்வ வலி­தாரர் ஒருவர் அவ­சி­ய­மாகும். குறித்த விடயம் தொடர்பில் விண்­ணப்பம் செய்­யப்­பட்ட அதே தினத்தில் குறித்த மண­ம­கனின் மைத்­து­னரை மண­ம­களின் வலிதார­ராக நிய­மித்து, வலி அனு­ம­திப்­பத்­தி­ரத்தை குறித்த காதி நீதிபதி வழங்­கி­யி­ருப்­பது சட்­டத்­துக்கு முர­ணா­ன­தாகும்” .

“சட்­டத்தின் நான்­கா­வது அட்­ட­வ­ணையில் கொடுக்­கப்­பட்­டுள்ள விதிக­ளுக்கு இணங்க, பிரிவு 47 இன் கீழ் கற்­ற­றிந்த காதி நீதி­பதி ஒருவ­ருக்கு வழங்­கப்­பட்ட பிரத்­தி­யேக அதி­கார வரம்பை (Exclusive Jurisdiction) அவர் முறை­யாகப் பயன்­ப­டுத்­த­வில்லை எனும் விடயம் காதி நீதி­மன்றப் பதி­வே­டு­க­ளி­ருந்து தெளி­வாக எம்மால் அவ­தா­னிக்க முடி­கின்­றது ”

மேலும், சட்­டத்தின் பிரிவு 25 (1) (அ) மற்றும் (2) இன் தெளி­வான கட்டாயத் தேவையை கற்­ற­றிந்த காதி நீதி­பதி ஒருவர் எவ்­வாறு கடந்து செல்ல முடியும்? என காதிகள் சபை கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்­ளது.

இச் சூழ்­நி­லையில், 03.01.2023 திக­தி­யி­டப்­பட்ட பாணந்­துறை காதி நீதிபதியின் உத்­த­ர­வையும் 05.01.2023 திக­தி­யி­டப்­பட்ட வலி அனுமதிப்பத்­தி­ரத்­தி­னையும் (Wali Authorization Certificate) மற்றும் குறித்த திரு­மணச் சான்­றி­த­ழையும் இரத்துச் செய்­துள்­ளது. மேலும் குறித்த திரு­மணம் வெற்றும் வறி­தா­ன­து­மென (Null and Void) பிரகடனப்படுத்தி காதிகள் சபை இவ் வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

குறித்த வழக்கின் மேன்முறையீட்டாளரான தந்தையின் சார்பில் சட்டத்தரணி றஷாட் அஹமடின் அறிவுறுத்தலுக்கமைய சிரேஷ்ட சட்டத்தரணி றுடானி ஸாஹிர் மன்றில் தோன்றி வாதங்களை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vidivelli

No comments:

Post a Comment