உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் : சாரா புலஸ்தினி, பிள்ளையான் தொடர்பில் விசாரணைகளில் புதிய தகவல் வெளியானது : முக்கிய வாக்குமூலங்கள் பதிவு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 29, 2025

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் : சாரா புலஸ்தினி, பிள்ளையான் தொடர்பில் விசாரணைகளில் புதிய தகவல் வெளியானது : முக்கிய வாக்குமூலங்கள் பதிவு

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்­கு­தல்கள் குறித்து புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணை­களில் மிக முக்­கிய சாட்­சி­யங்கள் சில பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக குற்றப் புல­னா­ய்வுத் திணைக்­கள தக­வல்கள் தெரி­வித்­தன.

குறிப்­பாக செனல் 4 தொலைக்­காட்­சியில் ஒளி­ப­ரப்­பப்பட்ட, சிவனேசதுரை சந்­திரகாந்தன் எனும் பிள்­ளை­யானின் நெருங்கியவராக இருந்த அசாத் மெள­லா­னாவின் பேட்­டியில் குறிப்பிடப்­பட்ட விட­யங்கள் தொடர்பில் தற்­போதும் பல வாக்கு மூலங்கள் பதிவு செய்­யப்­பட்டு சில விட­யங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்­ள­தாக அந்த தக­வல்கள் தெரி­வித்­தன.

குறிப்­பாக உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளுக்கு முன்­னரும், அதன் பின்­னரும் தற்­போது மர்­ம­மாக உள்ள சாரா எனும் புலஸ்­தினி மகேந்திரன் தொடர்­பிலும் புதிய விசா­ர­ணை­களில் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும், அது குறித்தும் முக்­கிய தக­வல்கள் வெளிப்­பட்­டுள்ள நிலையில் மேல­திக விசா­ர­ணைகள் முடுக்கி விடப்பட்­டுள்­ளன.

குறிப்­பாக, 2018 நவம்பர் மாதம் மட்­டக்­க­ளப்பு, வவு­ண­தீவு பகு­தியில் இரு பொலி­ஸாரை கொலை செய்து அவர்­களின் ஆயு­தங்­களை சஹ்ரான் கும்பல் கொள்­ளை­யிட்­டமை 2019 ஏப்ரல் 21 தாக்­கு­தலின் பின்னர் விசா­ர­ணையில் வெளிப்­பட்­டது. எனினும் அது­வரை அக்கொலைகள் விடு­தலைப் புலி ஆத­ர­வா­ள‌ர்­களால் செய்யப்பட்டதா­கவே காண்­பிக்­கப்­பட்­டது. அவ்­வாறு காண்பிப்பதற்காக போலி­யான சான்­று­களை உரு­வாக்க அரச உளவுச் சேவை மற்றும் இரா­ணுவ உள‌வுப் பிரிவு ஆகி­யவை முன்னின்று செயற்­பட்­டுள்­ள­தாக சந்­தே­கிக்­க­ப்­படு­கின்றது. இராணுவ உளவுப் பிரிவு அப்­போது குறித்த விசா­ர­ணை­களை முன்னெ­டுத்த சி.ஐ.டி. அதி­கா­ரி­களை திசை திருப்ப வழங்­கிய உளவு அறிக்­கைகள் இது தொடர்­பி­லான சந்­தே­கத்தை உரு­வாக்­கி­யி­ருந்­தது.

அதன்­படி இடம்­பெறும் புதிய விசா­ர­ணை­களில் தற்­போது, குறித்த பொலி­ஸாரின் கொலையை திசை திருப்ப ஜக்கட் ஒன்று அடங்­கிய பாட­சாலை பையை சம்­பவ இடத்­துக்கு அருகே மறைத்து வைத்து நாட­க­மா­டி­யமை தொடர்­பி­லான விட­யத்­துக்­காக அரச உளவுச் சேவையின் மட்­டக்­க­ளப்பு பிராந்தி­யத்தில் கட­மை­யாற்­றிய பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒருவர் கைது செய்­யப்­பட்டு தடுப்புக் காவலின் கீழ் விசா­ரிக்­கப்பட்டு வரு­கின்றார்.

குறித்த பொலிஸ் கான்ஸ்­டபிள் உள்­ளிட்டோர், குறித்த ஜக்கட் மீட்கப்பட முன்­னைய நாள், அப்­போதும் முன்னாள் புலிகள் இயக்க உறுப்­பினர் ஒரு­வரின் வீட்­டுக்கு தேடுதல் எனும் பெயரில் சென்று அதனை எடுத்­தி­ருப்­ப­தாக நம்­பப்­ப­டு­கின்­றது. பின்னர் அது வவுணதீவு பொலிஸார் கொலை செய்­யப்­பட்ட இடத்­துக்கு அருகே மறைத்து வைக்­கப்­பட்டு, அது தொடர்பில் சி.ஐ.டி.அதி­கா­ரி­க­ளுக்கும் அரச உளவுச் சேவை­யி­னா­லேயே தக­வலும் அளிக்­கப்­பட்­டுள்­ளது. இது குறித்த விசா­ர­ணை­களில் பல்வேறு தகவல்கள் அம்பலமாகி வருகின்றது.

இதில் பிள்ளையான் உள்ளிட்டோருக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரணைகள் இடம்பெறும் நிலையில், சில முக்கியமான வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக சி.ஐ.டி. தகவல்கள் வெளிப்படுத்தின.

Vidivelli

No comments:

Post a Comment