(எம்.மனோசித்ரா)
நாட்டில் கொவிட் தொற்றாளர் மற்றும் தொற்றுக்கு உள்ளானோர் உயிரிழக்கும் வீதம் குறைவடைந்து வருவதற்கு சமாந்தரமாக சிறுவர்கள் தொற்றுக்குள்ளாகும் வீதமும், உயிரிழக்கும் வீதமும் சடுதியாக குறைவடைந்து வருவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் ஷாமன் ரஜீந்திரஜித் தெரிவித்தார்.
சிறுவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகும் தற்போதைய நிலைவரம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த தினங்களில் சிறுவர் வைத்தியசாலையின் சிகிச்சை விடுதிகளில் பெருமளவில் கொவிட் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். எனினும் தற்போது அவற்றில் எந்த தொற்றாளர்களும் இல்லை. அதற்கமைய வைத்தியசாலையில் சுதந்திரமாக மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம்.
கொவிட் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த சிகிச்சை விடுதிகள் அனைத்தும் ஏனைய நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. தற்போது கொவிட் தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கையும், கொவிட் தொற்றுக்குள்ளான சிறுவர்கள் உயிரிழக்கும் வீதமும் சடுதியாக குறைவடைந்து வருகிறது என்றார்.
No comments:
Post a Comment