கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்காக இனிமேல் டோக்கன் வழங்கப்படுமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜூலை 02 ஆம் திகதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தலிலே இதுபற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒருநாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்கான டோக்கன் விநியோகம் இடம்பெறும்.
இந்த டோக்கன் வழங்கும் நடவடிக்கையானது முற்பகல் 6.30 மணி முதல் பிற்பகல் 02 மணி வரை மேற்கொள்ளப்படும்.
No comments:
Post a Comment