உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் சுகவீனமுற்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இன்று (30) மட்டக்களப்பு - கரடியனாறு ஆரம்ப பாடசாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாடசாலையின் சத்துணவுத் திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்த பெண்மணி கரடியனாறு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு - கரடியனாறு பிரதேச ஆரம்ப பாடசாலையில் வழங்கப்பட்ட சத்ததுணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 8 மாணவர்கள் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையிலும், 14 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சத்துணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் வயிற்று வலி வாந்திபேதி போன்ற சுகயீனத்திற்கு உள்ளான நிலையில் சிகிச்சைகுட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் கைதான குறித்த ஒப்பந்தக்கார பெண்மணியை நீதிமன்றத்தில் சட்ட நடவ டிக்கை உட்படுத்துவதற்கு செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கரடியனாறு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment