எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, June 30, 2025

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை திருத்தங்களை அறிவித்துள்ளது.

அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 185 ரூபாவாகும்.

மேலும் 92 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 305 ரூபாவாகும்.

 இதேவேளை, லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லிட்டர் ஒன்றின் விலையிலும் (325 ரூபா), லங்கா பெட்ரோல் 95 ஒக்டேன் யூரோ 4 லிட்டர் ஒன்றின் விலையிலும் (341 ரூபா), எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை எனவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைத்திருத்தங்களுக்கு அமைவாக தாங்களும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment