இலங்கை பங்குச் சந்தையில் முதன் முறை சாதனை - News View

About Us

About Us

Breaking

Monday, June 30, 2025

இலங்கை பங்குச் சந்தையில் முதன் முறை சாதனை

கொழும்பு பங்குச் சந்தையின் வரலாற்றில் முதன் முறையாக அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 18,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இலங்கை வரலாற்றில் கொழும்பு பங்குச் சந்தை (CSE) எட்டிய மிகப் பெரிய உச்சம் இன்று (30) பதிவானதன் மூலம் இது ஒரு வரலாற்று சாதனையாக பதிவாகியுள்ளது.

இன்று (30) நண்பகல் 12.04 மணியளவில் ASPI இந்த மைல்கல்லைக் கடந்துள்ளது.

இன்று காலை பங்குச் சந்தை நடவடிக்கை ஆரம்பித்தபோது, ASPI 17,872.74 ஆக பதிவாகியிருந்ததோடு, இது இன்றைய நாளின் இறுதியில் 129.23 அதிகரித்து 18,001.97 ஆக பதிவாகியிருந்தது.

இன்றைய நாளின் இறுதியில் 257,300,748 பங்குகள் பரிமாறப்பட்டதோடு, மொத்த பங்கு புரள்வு ரூ. 6,381,814,442 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment