நீதிமன்றத்தில் ஆஜரான கெஹெலியவிற்கு விளக்கமறியல் நீடிப்பு : மூன்று முறைப்பாடுகளின் கீழான வழக்கு விசாரணையின் பின் உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 20, 2025

நீதிமன்றத்தில் ஆஜரான கெஹெலியவிற்கு விளக்கமறியல் நீடிப்பு : மூன்று முறைப்பாடுகளின் கீழான வழக்கு விசாரணையின் பின் உத்தரவு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை ஜூன் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (20) உத்தரவிட்டார்.

“ஊழல்” குற்றச்சாட்டின் கீழ் 3 முறைப்பாடுகள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று (20) கொழும்பு பிரதான நீதவான் தனூஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment