போலியான அல்லது மோசடியில் ஈடுபடும் இணையத்தளங்கள் சிலவற்றின் மூலமாக இந்தியாவுக்கான இணைய வீசாவினை (e-Visa) வழங்குவதாக கண்டறியப்பட்டுள்ளதாக, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இந்தியாவுக்கான e-விசாவைப் பெற்றுக் கொள்வதற்கு இவ்வாறான போலி இணைய முகவரிகள் அவதானமாக இருக்குமாறும் அவ்வாறான தளங்களைப் பயன்படுத்த வேண்டாமென விண்ணப்பதாரிகளிடம் உயர் ஸ்தானிகராலயம் அறிவுறுத்தியுள்ளது.
(போலி e-Visa இணையத்தள பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

No comments:
Post a Comment