கொரோனாவை கட்டுப்படுத்த மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து - News View

About Us

About Us

Breaking

Friday, September 24, 2021

கொரோனாவை கட்டுப்படுத்த மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மூக்கு வழியாக செலுத்தும் ஸ்பிரே மருந்தை இங்கிலாந்து நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த போக்ஸ்பயோ என்ற நிறுவனம், கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுப்பதற்காக மூக்கு வழியாக செலுத்துகிற ஸ்பிரே தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.

இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுப்பதில் 63 சதவீதம் பயனுள்ளது என கண்டறியப்பட்டுள்ளதுடன் அதனை இந்தியாவில் அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்திய நிறுவனமே குறித்த தடுப்பு மருந்தை தயாரித்து, அங்கு மலிவு விலையில் கிடைக்கச் செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக போக்ஸ்பயோ நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசியை அதிகபட்ச ஆபத்தைக் கொண்டுள்ள 648 சுகாதார பணியாளர்களைக் கொண்டு சோதித்துப் பார்த்ததில் இது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை தடுப்பதில் 63 சதவீதம் செயல்திறனைக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த தடுப்பு மருந்தை இரு நாசிகளிலும் தலா 2 ஸ்பிரேயை ஒருவர் தானாகவே செலுத்திக் கொள்ள முடியும். இது 6 முதல் 8 மணி நேரம் பாதுகாப்பைத் தரும் என சொல்லப்படுகிறது.

இதையொட்டி அந்த நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் ராகேஷ் உப்பல் கூறுகையில், தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமானது என்றபோதும், அது 100 சதவீதம் பயன் அளிப்பதில்லை. தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கொரோனா பாதிப்பு அபாயம் உள்ளது.

போக்ஸ்வெல் என்ற பெயரில் நாங்கள் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து, தடுப்பூசி, சுய பாதுகாப்பு கருவிகளுடன் கூடுதல் பாதுகாப்பை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment