கண்டி மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த இரு கிராம அலுவலர் பிரிவுகள் விடுவிப்பு - News View

About Us

Add+Banner

Breaking

  

Tuesday, March 2, 2021

demo-image

கண்டி மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த இரு கிராம அலுவலர் பிரிவுகள் விடுவிப்பு

Isolation-of-Kandy-Galhinna-Palliya-Kotuwa-Lifted-NOCPC
கண்டி மாவட்டத்தின் கல்ஹின்ன, பல்லியகொட்டுவ கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கொவிட்-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த பிரதேசங்கள், கடந்த ஜனவரி 25ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *