கண்டி மாவட்டத்தின் கல்ஹின்ன, பல்லியகொட்டுவ கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
கொவிட்-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த பிரதேசங்கள், கடந்த ஜனவரி 25ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment