கல்முனை பிரதேச செயலக பிரிவில் பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு...! - News View

About Us

About Us

Breaking

Monday, February 1, 2021

கல்முனை பிரதேச செயலக பிரிவில் பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு...!

(சர்ஜுன் லாபீர், றாசிக் நபாயிஸ்)

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கையின் அடிப்படையில் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அந்த வகையில் கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 25 பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை மற்றும் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (01) கல்முனை பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நியமனத்தில் ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான பிரச்சினைகளால் பிற்படுத்தப்பட்ட பட்டதாரிகள், ஏற்கனவே நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகள் மற்றும் மேன்முறையீடு செய்யப்பட்ட பட்டதாரிகள் ஆகியோருக்கு இந்நிகழ்வின்போது புதிய நியமனங்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்ரம்சான், அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல். யாஸீன் பாவா, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம். ஹசன் ஆகியோர் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்கி வைத்தனர்.

No comments:

Post a Comment