இலங்கையில் 4ஆம் நாளில் 36,396 பேருக்கு தடுப்பூசி வழங்கி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, February 1, 2021

இலங்கையில் 4ஆம் நாளில் 36,396 பேருக்கு தடுப்பூசி வழங்கி வைப்பு

இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில், இன்றைய நான்காம் நாளில் (01) 36,396 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் கடந்த ஜனவரி 29 முதல் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சுகாதார பிரிவு ஊழியர்கள் மற்றும் கொவிட்-19 ஒழிப்பில் முன்னணியில் நின்று செயற்படும் ஊழியர்களுக்கு, முதற் கட்டமாக முதலாவது கொவிட்-19 தடுப்பூசி டோஸ் வழங்ககப்பட்டு வருகின்றது.

அதற்கமைய, கடந்த 4 நாட்களில் 95,550 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment