சீனாவின் வூஹான் நகரில் உள்ள இலங்கை மாணவர்களை இலங்கைக்கு கொண்டு வர அனுமதி கிடைத்துள்ளதாக சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
அதன்படி வூஹான் நகரிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இலங்கையர்களை அழைத்து வருவதற்காக ஏற்பாடு செய்திருந்த விமானம் தற்போது சீனா நோக்கி புறப்பட்டுள்ளது.
அதன்படி வூஹான் நகரிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இலங்கையர்களை அழைத்து வருவதற்காக ஏற்பாடு செய்திருந்த விமானம் தற்போது சீனா நோக்கி புறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தோற்றம் பெற்ற இடமாக கருதப்படும் சீனாவின் வூஹான் நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியிலிருந்து யாரையும் வெளியேற்ற சீன அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கவில்லை.
இந்நிலையில் வூஹானில் கல்வி கற்கும் 33 இலங்கை மாணவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் வெளியேற்றுமாறு பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம் வலியுறுத்தி வந்த நிலையிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனால் பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம் வூஹான் நகரில் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸை தரையிறக்குவதற்கும் அனுமதியை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL 1422 எனும் விமானமே இன்று (31) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது.
குறித்த விமானம் நாளையதினம் (01) இலங்கையர்களை அழைத்துக் கொண்டு இலங்கை திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து குறித்த மாணவர்களை சோதனைக்குட்படுத்துவதற்காக, அவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக தியத்தலாவ இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment