தத்தளித்த 4 இந்திய மீனவர்கள் கடற்படையினால் மீட்பு - News View

About Us

Add+Banner

Monday, September 2, 2019

demo-image

தத்தளித்த 4 இந்திய மீனவர்கள் கடற்படையினால் மீட்பு

Navy-Rescued-4-Indian-Fisherman
யாழ்ப்பாணம், கச்சதீவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் படகொன்றில் தத்தளித்த இந்திய மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கடலின் சீற்றம் காரணமாக பாதிக்கப்பட்ட படகொன்றையும் அதில் பயணித்த நான்கு மீனவர்களையும் கடற்படையினர் இவ்வாறு மீட்டுள்ளனர்.

நேற்று (01) காலை கடலின் கொந்தளிப்பு காரணமாக பாதிப்புக்குள்ளான படகொன்றில் பயணித்த மீனவர்களே இவ்வாறு கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளனர்.

வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவுக்கு சொந்தமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கப்பலில் பயணித்த கடற்படை குழுவினரால் அவர்கள் கண்காணிக்கப்பட்டதை அடுத்து, உடனடியாக அவர்களுக்கு உதவியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கடல் கொந்தளிப்பினால் சோர்வடைந்த மீனவர்களுக்கு உணவு மற்றும் நீர் ஆகாரங்களையும் கடற்படையினர் வழங்கி உதவியுள்ளனர்.

குறித்த படகிலிருந்து மீட்கப்பட்டோர் 37 தொடக்கம் 60 வயதுடைய நான்கு இந்தியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்வள பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை கடற்பரப்பில் பாதிப்புக்குள்ளாகும் மீனவர்கள் மற்றும கடற்றொழிலாளர்களுக்கும் உதவும் நடவடிக்கையில் கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கடற்படை பேச்சாளர் இசுறு சூரிய பண்டார கடற்படை தெரிவித்துள்ளது.
Navy-Rescued-4-Indian-Fisherman-2
Navy-Rescued-4-Indian-Fisherman-3
Navy-Rescued-4-Indian-Fisherman-1

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *