இலங்கை மத்திய வங்கி அதனது அரையாண்டு வெளியீடான – 'அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள் : 2018இன் முக்கிய பண்புகளும் 2019 இற்கான வாய்ப்புக்களும்' என்பதனை நேற்று (30) வெளியிட்டுள்ளது.
2018இல் இலங்கைப் பொருளாதாரத்தின் செயலாற்றம் தொடர்பான மத்திய வங்கி வெளியிட்டுள் அறிக்கை பின்வருமாறு,
இலங்கைப் பொருளாதாரம் உலகப் பொருளாதார அபிவிருத்திகளிலிருந்து எழுகின்ற புதுப்பிக்கப்பட்ட சவால்களுக்கு முகங்கொடுத்தமை ஆண்டின் முதற்காலாண்டில் அவதானிக்கப்பட்ட வலுவான உறுதித்தன்மைப் பாதையினை தடங்கலுறச் செய்தது.
பொருளாதாரம் 2017இல் பதிவுசெய்யப்பட்ட ஒப்பீட்டளவில் தாழ்ந்த வளர்ச்சியான 3.3 சதவீதத்தினைத் தொடர்ந்து 2018இன் முதலரைப்பகுதியில் 3.6 சதவீதம் கொண்டதொரு மெதுவான வேகத்தில் வளர்ச்சியடைந்தது.
இக்காலப்பகுதியில் நிலவிய சாதகமான வானிலை நிலைமைகளினால் ஆதரவளிக்கப்பட்டு வேளாண்மை செயற்பாடுகள் 2018 முதலரைப்பகுதியில் தமது மீட்சியினைத் தொடர்ந்தன.
முக்கியமாக கட்டடவாக்கம் மற்றும் சுரங்கமகழ்தலும் கல்லுடைத்தலும் துணைத் துறைகளின் மட்டுப்படுத்தப்பட்ட செயலாற்றத்தினால் கைத்தொழில் செயற்பாடுகளின் வளர்ச்சி மெதுவடைந்தது.
நிதியியல் பணிகள், மொத்த விற்பனை மற்றும் சில்லறை வியாபாரம் மற்றும் ஏனைய தனியாள் பணிகளின் செயற்பாடுகளது வளர்ச்சியினால் முக்கியமாக தூண்டப்பட்டு பணிகள் செயற்பாட்டின் விரிவாக்கம் பரந்துபட்டதாகவிருந்தது.
இதேவேளை, தொழிலின்மை வீதத்தில் 2018 முதலரைப்பகுதியில் ஒரு அதிகரிப்பு அவதானிக்கப்பட்டது. தளம்பலடையும் உணவு விலைகளின் அசைவுகள் மற்றும் உள்நாட்டில் பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் ஏனைய நிருவகிக்கப்பட்ட விலைகளின் மேல் நோக்கி திருத்தங்களினொரு விளைவாக சில மாதங்களில் மேல் நோக்கி உயர்ந்த போதிலும் நுகர்வோர் விலைப் பணவீக்கம் 2018இன் இற்றை வரை தாழ்ந்ததாகவே தொடர்ந்துமிருந்தது.
இதேவேளை, கடந்த காலத்தில் பேணப்பட்டு வந்த இறுக்கமான நாணயக் கொள்கை நிலைப்பாட்டிற்குப் பதிலிறுத்தி நாணய மற்றும் கொடுகடனின் விரிவாக்கம் படிப்படியாக மெதுவடைந்தது.
2018 ஏப்ரலில் கொள்கை வட்டி வீதங்களின் வீச்சின் மேலெல்லை கீழ் நோக்கித் திருத்தப்பட்டமை மற்றும் பொருத்தமான திறந்த சந்தைத் தொழிற்பாடுகளினூடாக தோற்றம் பெற்றுவரும் சந்தை நிலைப்பாடுகளுக்கமைவாக வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணம் சந்தை வட்டி வீதம் வீச்சினுள் திருத்தமடைவதற்கு அனுமதித்ததுடன் மத்திய வங்கி நாணயக் கொள்கை மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பில் ஒரு முன்னெச்சரிக்கையான அணுகுமுறையைப் பேணிக் கொண்டது.
வெளிநாட்டுத் துறையில், சுற்றுலா உட்பட பணிகள் ஏற்றுமதிகள் மீதான வருவாய்கள் மற்றும் தொழிலாளர் பணவனுப்புதல்கள் வெளிநாட்டு நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையினைச் சிறிதளவில் குறைப்பதற்கு துணைபுரிந்த போதிலும் இறக்குமதிச் செலவினத்தின் வளர்ச்சி ஏற்றுமதி வருவாயின் உயர்வினை விஞ்சியதனால் வர்த்தகப் பற்றாக்குறை மேலும் விரிவடைந்தது.
எரிபொருள் இறக்குமதிகள் மற்றும் மோட்டார் ஊர்திகள் மற்றும் தங்கத்தின் இறக்குமதிகளின் அதிகரித்த செலவினத்தின் பகுதியளவான காரணத்தால் விரிவடைகின்ற வர்த்தக மற்றும் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறைகளுக்கு மத்தியில் இறுக்கமடைந்து வரும் உலக நிதியியல் நிலைப்பாடுகள் மற்றும் வலுவடைந்துவரும் ஐ.அ.டொலரின் காரணமாகத் தோற்றம் பெற்றுவரும் சந்தையின் விரைவான விற்பனைகளின் மீதான அழுத்தங்களினை சென்மதி நிலுவை அனுபவித்தது.
இத்தகைய அபிவிருத்திகள் இலங்கை ரூபாவின் விரைவான தேய்வடைதலுக்கு வழிவகுத்ததுடன் கேள்வி மற்றும் நிரம்பல் நிலைப்பாடுகளை அதன் போக்கினைத் தீர்மானிப்பதற்கு அனுமதிக்கின்ற வேளையில் செலாவணி வீதத்தின் ஒழுங்கற்ற திருத்தங்களைத் தவிர்ப்பதற்கு சிலவேளையில் மத்திய வங்கி சந்தையில் தலையிட்டது.
இதேவேளையில், ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் ஒன்றுதிரண்ட வரவு செலவுத்திட்ட மீதி மற்றும் ஆரம்ப மீதி போன்றவை மேம்பாடடைந்த வேளையில் நடைமுறைக் கணக்கு மீதி சிறிதளவால் மோசமடைந்து இறைத் துறையின் செயலாற்றம் கலப்பானதாகக் காணப்பட்டது.
இருப்பினும், செலவினங்களில் அவதானிக்கப்பட்ட குறைவிற்கு மாறாக எதிர்பார்க்கப்பட்டதனை விடக் குறைவான அரசிறைத் திரட்டல் 2018 வரவு செலவுத்திட்டத்தின் இலக்கினை அடைந்து கொள்வதனை சவாலாக்கக்கூடும்.
நிதியியல் துறையில், முக்கிய பேரண்ட முன்மதியுடைய கரிசனைகளின்றி 2018 முதலரைப்பகுதியில் வளர்ச்சி உத்வேகம் தொடர்ந்த வேளையில் சில இடர்ப்பாட்டுடன் கூடிய நிதியியல் நிறுவனங்களுடன் நீண்ட காலமாகத் தொடர்கின்ற பிரச்சனைகளினைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை, 2018 யூனிற்கான கணியம்சார் செயலாற்றப் பிரமாணங்களில் தளம்பலடைகின்ற உலக நிலைப்பாடுகளின் காரணமாக பன்னாட்டு ஒதுக்கங்களுக்கான இலக்கு தவறிய போதிலும் ஆரம்ப இறை மீதி மற்றும் பணவீக்கம் தொடர்பிலானவற்றை நாடு அடைந்து கொண்டதுடன் பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டம் தொடர்ந்தது.
எரிபொருளுக்கான தன்னியக்க விலைச் சூத்திரம் உட்பட பல்வேறு குறிப்பிடத்தக்க அமைப்பியல் அடிப்படைகளும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அடையப்பட்டுள்ளன.
முன்னோக்கிச் செல்கையில், உள்நாட்டு உற்பத்தி, வணிகப்பொருட்கள் மற்றும் பணிகள் ஏற்றுமதிகளிற்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளிற்கும் வசதியளிப்பதற்காக எடுக்கப்பட்ட வழிமுறைகளுக்குப் பதிலிறுத்து பொருளாதாரமானது படிப்படியான உத்வேகத்தினை அடைந்துகொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது.
பேரண்ட மட்டத்தில், உத்தேசிக்கப்பட்ட நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடலின் கீழ் தாழ்ந்ததும் உறுதியானதுமான பணவீக்கம் பேணப்படுதல், போட்டித்தன்மை மிக்க செலாவணி வீதம், அரசாங்கத்தின் இறைத்திரட்சி முயற்சிகளின் தொடர்ச்சி போன்றவை நடுத்தர காலத்தில் பேரண்டப் பொருளாதார உறுதியினை உறுதிப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.
தாழ்வான பொருளாதார செயலாற்றத்திற்கு மத்தியில் இறுகிவரும் நாணய, இறை மற்றும் வெளிநாட்டுக் கொள்கை இடைவெளியில் பின்னணியில், பொருளாதாரத்தில் அதிகரித்த உற்பத்தித்திறனிற்கு ஆதரவளிக்கும் முன்னெச்சரிக்கையான, சீரான மற்றும் நீண்ட கால நோக்குடனான திருத்தங்கள் மூலம் தனியார் துறையினால் முன்னெடுக்கப்பட்ட வளர்ச்சிக்கு வசதியளிப்பது அவசியமாகும்.
நாட்டின் பேரண்டப்பொருளாதார அடிப்படையை மேம்படுத்தும் வேளையில் அமைப்பியல் மாற்றம் மூலம் பொருளாதாரத்தை வலுபடுத்துவதன் நோக்கத்தை அன்மைக்கால அனுபவங்கள் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளன.
மிகவும் அவசியமாக தேவைப்படுகிற திருத்தங்களை பிற்போடுவது என்பது உள்ளக மற்றும் வெளிவாரியான குழப்பங்களுக்கான பாதிப்படையக்கூடிய தன்மையை அதிகரிப்பதற்கு மத்தியில் தனது பிராந்திய சகாக்களுடன் ஒப்பிடுகையில் இலங்கைப் பொருளாதாரம் பின்தங்குவதையே விளைவிக்கும்.
ஆகவே, ஓர் அதிக உற்பத்தித்திறனுடனான மனித மற்றும் பௌதீக வளங்களை முழுமையாக பயன்படுத்தப்படும் வகையிலான ஓர் மேல் நடுத்தர வருமான பொருளாதாரமாக இலங்கை முன்னேற்றுவதற்கு ஓர் வெளிப்படையான கட்டமைப்பிற்குள் இவ்வாறான திருத்தங்கள் துரிதமாக நடைமுறைபடுத்தப்படவேண்டியது அவசியமாகும்.
No comments:
Post a Comment