விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் பயம் இன்றி பயிர் செய்வோம் செயல் திட்டம் ஆரம்பம் - News View

About Us

Add+Banner

Thursday, September 27, 2018

demo-image

விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் பயம் இன்றி பயிர் செய்வோம் செயல் திட்டம் ஆரம்பம்

42510110_10160749864540567_7137242331685584896_n
பயம் இன்றி பயிர் செய்வோம் என்னும் தொனிப்பொருளில் 2018-2019 ஆண்டுக்கான காலபோக உரமானிய வழங்கும் சுற்றறிக்கை செயல்திட்டம் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. இதுதொடர்பான நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (27) காலை இடம்பெற்றது

விவசாய பிரதி அமைச்சர் அங்கு உரையாற்றுகையில் சிறந்த விவசாய துறை சார் வல்லுனர்களின் கடின உழைப்போடு குறுகிய கால பரப்பினுள் பரந்தளவிலான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அதன் பிரதிபலனாகவே காலபோக செய்கையை கருத்தில் கொண்டு இம்முறை விவசாய செய்கையாளர்களுக்கு உரிய தருணத்தில் உரமானி யங்கள் வழங்குவதற்கு சிறந்த சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதாகவும் பயமின்றிய விவசாய செய்கைக்கு காப்புறுதிகள் வழங்கப்பட்டு கொள்வனவுகள் அதிகரிக்கப்பட்டு உற்பத்திகளும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
42687615_10160749851635567_4021540147404210176_n
சுற்றறிக்கையில் உர வகைகளை அளவுடன் உபயோகப்படுத்த குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாய அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன். பதிவை மேற்கொள்ளாத விவசாயிகள் அதற்கான நடவடிக்கையை மேற்கொள் வேண்டும். எதிர்கால விவசாய சிறப்பான வளங்களை பெற்றுக்கொள்ளலாம்.

ஆவணங்கள் இல்லாது பயிர் செய்கைகள் மேற்கொள்ளும் பிரதேச பகுதிகளை கமநல சேவை நிலையங்கள் உறுதிப்படுத்துவதன் ஊடாக உரமானியங்களை பெற்றுகொள்ளவும் சுற்றறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியினையும் இந்த நாட்டிற்கு சிறந்த உற்பத்திகளையும் வழங்குவதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். விவசாயிகள் பிரதி அமைச்சரினால் கௌரவிக்கப்பட்டனர்.
42691398_10160749852440567_2537018090617569280_n
கமநல சேவை நிலையங்கள் ஊடாக விஜயம் செய்து பல விடையங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு இருந்தவேளையும் இன்று இடம்பெற்ற மானிய சுற்றறிக்கை நிகழ்விலும் பல்வேறு திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் இணைந்திருந்தமையினால் முக்கியமான விடையங்களை அதிகாரிகளுக்கு நேரடியாக தெரிவிக்கும் முகமாக பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் சிறிய கலந்துரையாடலுக்கான சந்தர்ப்பத்தினையும் வழங்கியிருந்தார்.

வடக்கு கிழக்கிற்கு விவசாயிகளினது தேவைகளை சேவைகளாக முன்னெடுப்பதற்கு சிறந்த அமைச்சர் இந்த நாட்டு மக்களுக்கு விவசாய அமைச்சர் கிடைத்திருப்பதாகவும்இஅதற்காக இந்த உரிய கால நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

இந்தநிகழ்வில் அமைச்சின் செயலாளர் விஜயரத்ன அமைச்சின் மேலதிக செயலாளர் உப்புல் மென்டிஸ் கமநல திணைக்கள அபிவிருத்தி ஆணையாளர் விக்கரமசிங்கே, வட மாகாண கமநல சேவை நிலைய ஆணையாளர்கள் யாழ். மாவட்ட, கிளிநொச்சி மற்றும் வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் சுகுனரதி தெய்வேந்திரம், சுரேஸ்குமார் சத்தியசீலன், வட மாகாண கமநல சேவைநிலையம் மற்றும் ஆராய்ச்சி நிலைய உத்தியோகத்தர்கள் வட மாகாண விவசாய சம்மேளன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
42593363_10160749866170567_1346180249649414144_n

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *