நாளை (28) இடம்பெறவுள்ள தகவல்களை அறிந்துகொள்ளும் சர்வதேச தினத்திற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள தகவல் வாரத்தின் மற்றுமொரு நிகழ்வான RTI for Public Service Excellence 2018 என்ற நிகழ்வு கொழும்பில் இன்று (27) இடம்பெற்றது.
சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளரான பேராசிரியர் திருமதி அருணா ரோஜ் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளரும் (அபிவிருத்தி, திட்டமிடல்) ஐரிஎன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவருமான திருமதி திலகா ஜயசுந்தர தலைமையில் நடைபெற்றது.
தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை தொடர்பான சட்டம். அது தொடர்பிலான செயற்பாடுகள் சமூக பயன்பாடுகள் குறித்து உள்நாட்டு, வெளிநாட்டு அனுபவங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
தகவல்களை அறிந்துகொள்ளும் சட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்த நூல் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
தகவல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பியதிஸ்ஸ ரணசிங்க , அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன, பிரபல விரிவுரையாளரும் ஊடகவியலாளருமான நாளக குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் தகவல்களை அறிந்துகொள்ளும் சட்டசெயற்பாட்டு பிரிவினால் இந்த நிகழ்வு ஏறப்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்விற்கு United Nations Development Programme (UNDP) , United States Agency for International Development( USAID) மற்றும் Strengthening Democratic Governance and Accountability Project (SDGAP) ஆகியன அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment