வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் ஆசிரியை திருமதி. சிவகுரு ஜெயமாலினி ராமகிருஸ்ணனினால் எழுதப்பட்ட “இலங்கை வரலாறு” என்ற நூல் வெளியீடு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் அ.ஜெயஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர் தி. ரவி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும், அதிதிகளாக கோறளைப்பற்று கோட்டக் கல்விப்பணிப்பாளர் நா. குணலிங்கம், வலயக்கல்வி ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை ஆசிரியர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது இலங்கை வரலாறு என்ற நூலின் முதல் பிரதி கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர் தி. ரவிக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.
இலங்கை வரலாறு என்ற நூலின் ஆய்வினை கல்குடா கல்வி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் த.அகிலன் வழங்கியதுடன், ஏற்புரையை நூல் ஆசிரியை திருமதி. சிவகுரு ஜெயமாலினி ராமகிருஸ்ணன் வழங்கினார்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment