சமையல் எரிவாயு விற்பனையை அவதானிக்க விசேட குழுக்கள் களத்தில் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 1, 2018

சமையல் எரிவாயு விற்பனையை அவதானிக்க விசேட குழுக்கள் களத்தில்

நாடு முழுவதும் உள்ள சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களில் குறைக்கப்பட்ட விலையில் எரிவாயு விற்பனை இடம்பெறுகின்றதா என்பதை அவதானிக்க விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மாவட்ட மட்டத்தில் உள்ள நுகர்வோர் அதிகார சபையின் சகல காரியாலயங்களுக்கும் இது தொடர்பிலான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

அதிக விலையில் சமையல் எரிவாயுவை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகார சபை மேலும் கூறியுள்ளது.

No comments:

Post a Comment