உத­யங்­கவை நாடு கடத்­து­மாறு கோரிக்கை முன்­வைப்பு.! - News View

About Us

About Us

Breaking

Monday, April 2, 2018

உத­யங்­கவை நாடு கடத்­து­மாறு கோரிக்கை முன்­வைப்பு.!

ஐக்­கிய அரபு அமீ­ரக அதி­கா­ரி­களால் ரஷ்­யா­வுக்­கான முன்னாள் இலங்கை தூதுவர் உத­யங்க வீர­துங்க கைது செய்­யப்பட்­டுள்ள நிலையில் அவரை இலங்­கை­யிடம் கைய­ளிக்­கு­மாறு கோரிக்கை முன்­வைக்­கப்பட்­டுள்­ளது. 

இலங்கை பொலிஸார் வெளி­வி­வ­கார அமைச்சினூடாக இக் கோரிக்­கையை ஐக்­கிய அரபு அமீ­ரக பொலி­ஸா­ரிடம் முன்வைத்துள்­ள­தா­கவும் அதில் உதயங்­கவை இலங்­கைக்கு நாடு கடத்தக் கோரி­யுள்­ள­தா­கவும் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் பொலிஸ் அதி­காரியொருவர் ''கேச­ரி''க்கு தெரி­வித்தார். 

டுபாய் விமான நிலை­யத்தில் வைத்து வெளி­நா­டொன்­றுக்குச் செல்லும் நோக்­குடன் வந்த உதயங்க வீர­துங்­கவை அந் நாட்டு பாதுகாப்பு தரப்பு கைது செய்து தற்­போது அபு­தா­பிக்கு அழைத்துச் சென்­றுள்­ள­தா­கவும் இந் நிலை­யி­லேயே அக் கோரிக்கை முன்வைக்கப்பட்­டுள்­ள­தா­கவும் அவ்வதி­காரி மேலும் தெரி­வித்தார்.

எவ்­வா­றா­யினும் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி டுபாயில் கைதான உதயங்கவை அந்நாட்டு நீதி­மன்றில் ஆஜர் செய்து அதில் கிடைக்கப்பெறும் தீர்­மா­னத்­துக்கமை­யவே இலங்­கைக்கு அவரை நாடு கடத்­து­வதா இல்­லையா என்ற இறுதித் தீர்­மா­னத்­துக்கு அந்நாட்டு அதி­கா­ரிகள் வருவர் என ஐக்­கிய அரபு அமீ­ரக தகவல்களை மேற்கோள்காட்டி உயர் பொலிஸ் அதி­காரியொருவர் தகவல் தெரிவித்தார்.

இந் நிலையில் உத­யங்க வீர­துங்கவை எப்­ப­டி­யேனும் இலங்­கைக்கு அழைத்து வந்து இங்கு அவ­ருக்ெகதி­ரா­க­வுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் விசா­ரணை செய்­ய­வுள்­ள­தா­கவும் இது தொடர்பில் நடவடிக்­கைகள் எடுக்­கப்பட்டு வரு­வ­தா­கவும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர தெரி­வித்­துள்ளார். 

மிக்–27 ரக விமான கொள்­வ­னவின் போது இடம்­பெற்­ற­தாகக் கூறப்படும் 14 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் மோசடி தொடர்பில் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் சந்­தேக நப­ராக கருதி தேடப்­பட்டு வரும் ரஷ்­யா­வுக்­கான முன்னாள் இலங்கை தூதுவர் உத­யங்க வீர­துங்க டுபாயில் வைத்து கடந்த பெப்­ர­வரி மாதம் 4 ஆம் திகதி முதன்முறை­யாக கைது செய்­யப்­பட்ட நிலையில் அவரை இலங்­கைக்கு அழைத்து வர பெப்ர­வரி மாதம் 7 ஆம் திகதி இரு சிறப்புக் குழுக்கள் டுபாய் சென்­றன. 

மேல­திக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதா­கொட, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்­தி­யலங்­கார உள்­ளிட்ட 7 பேர் கொண்ட குழு­வி­னரே இவ்வாறு அவரை இலங்­கைக்கு அழைத்துவரும் முயற்­சி­யாக டுபாய் சென்­றனர். எனினும் பெப்ர­வரி 8 ஆம் திகதி டுபாய் அதி­கா­ரிகள் உதயங்­கவை விடு­தலை செய்ததுடன் அழைத்து வரச் சென்ற குழுவும் வெறுங்­கை­யுடன் நாடு திரும்­பி­யது. 

பின்னர் பெப்ர­வரி மாதம் 19 ஆம் திகதி மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் யசந்த கோதா­கொட மற்றும் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­ப­ாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் பி.கே.டி.பிரி­யந்த உள்­ளிட்ட சிறப்புக்குழு­வொன்றும் மீளவும் உதயங்­கவை இலங்கைக்கு அழைத்­து­வரும் முயற்­சி­யாக டுபாய் சென்­றது. எனினும் அம் முயற்சியும் கைகூடவில்லை. இந்நிலையிலேயே கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி உத யங்க வீரதுங்க டுபாய் விமான நிலை­யத் தில் வைத்து மீளவும் கைது செய்யப்பட்­டுள்ளார்.

No comments:

Post a Comment