உஷ்ண காலநிலை ஏப்ரல் இறுதிவரை - News View

About Us

About Us

Breaking

Sunday, April 1, 2018

உஷ்ண காலநிலை ஏப்ரல் இறுதிவரை

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் உஷ்ணமான காலநிலை ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

காற்றின் வேகம் குறைவடைந்தமை உள்ளிட்ட பல காரணிகளால் வெப்பமான காலநிலை அதிகரித்துள்ளதாக திணைக்களம்சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு 1 முதல் 3 செல்சியஸ் வரை அதிகரித்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. உஷ்ண காலநிலை காரணமாக சிறுவர்களுக்கு நோய் தொற்றும் வாய்ப்புள்ளதால் அதிகமாக நீர் அருந்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment