நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தை மாவட்ட இன விகிதாசாரத்தின்படி பகிர்ந்தளிக்குக : சட்டமா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்து மாவட்ட ஒருக்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 9, 2025

நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தை மாவட்ட இன விகிதாசாரத்தின்படி பகிர்ந்தளிக்குக : சட்டமா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்து மாவட்ட ஒருக்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம்

சவூதி அரே­பி­யா­வினால் அக்­க­ரைப்­பற்று, நுரைச்­சோலை பிரதேசத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள வீட்டுத் திட்­டத்­தினை மாவட்ட இன விகி­தா­சா­ரத்­திற்­க­மைய பகிர்ந்­த­ளிப்­ப­தற்கு தேவை­யான நடவடிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு சட்­டமா அதி­ப­ரிடம் வேண்டுகோள் விடுக்­கப்­ப­டுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த வேண்­டுகோள் தொடர்­பான தீர்­மானம் கடந்த செப்­டம்பர் 30ஆம் திகதி நடை­பெற்ற அம்­பாறை மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அம்­பாறை மாவட்ட செய­லாளர் சிந்­தக அபே­ய­விக்­ர­மவின் ஏற்பாட்டில் பிரதி அமைச்சர் வசந்த பிய­திஸ்ஸ தலை­மையில் நடைபெற்ற இந்தக் கூட்­டத்தில் சவூதி வீட்டுத் திட்டம் தொடர்பில் விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு கைய­ளிக்­கப்­பட்ட இந்த வீட்டுத் திட்டம் நீதிமன்ற தீர்ப்பின் கார­ண­மாக இன்றுவரை கைய­ளிக்­கப்­ப­டாமல் காணப்­ப­டு­கின்­றது. இதன் கார­ண­மாக குறித்த வீட்டுத் திட்டம் பாவனைக்­கு­த­வாத நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது என அவர் இதன்போது குறிப்­பிட்டார்.

நாட்டின் இன விகி­தா­சாரத்­திற்கு ஏற்ப இந்த வீட்டுத் திட்­டத்­தி­லுள்ள வீடு­களை பகிர்ந்­த­ளிக்­கு­மாறு உயர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. எனினும், மாவட்ட இன விகி­தா­சா­ரத்­திற்­க­மைய இந்த வீடு­களை பகிர்ந்­த­ளிக்­கு­மாறு அம்­பாறை மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டத்தில் ஏற்­க­னவே தீர்­மா­னிக்­கப்­­பட்­டுள்­ளதாக பிரதி அமைச்சர் கூறினார்.

குறித்த தீர்­மா­னத்­தினை மீண்டும் இன்­றைய கூட்­டத்தில் (செப்­டம்பர் 30) நாங்கள் நிறை­வேற்­றி­யுள்ளோம். இதற்­க­மைய, முஸ்லிம், சிங்­கள மற்றும் தமிழ் என்ற விகி­தா­சார அடிப்­ப­டையில் இந்த வீடு­களை பகிர்ந்­த­ளிக்க முடியும் எனவும் அவர் தெரி­வித்தார்.

எவ்­வா­றா­யினும், நீதி­மன்ற தீர்ப்­பிற்கு அகௌ­ரவம் ஏற்படுத்தக்கூடாது. இதனால் குறித்த விவ­காரம் தொடர்­பாக உயர் நீதி­மன்­றத்தில் நகர்த்தல் பத்­தி­ர­மொன்றை சமர்ப்­பிக்­கு­மாறு சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினை கோர மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டத்தில் தீர்­மா­னித்­துள்ளோம் என அவர் குறிப்­பிட்டார்.

இந்த வீடு­களை உட­ன­டி­யாக மக்­க­ளுக்கு கைய­ளிக்­கப்­பட வேண்டும் என்ற விட­யத்தில் இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூதுவர் காலித் பின் கமூத் அல்­கஹ்­தானி மிகவும் அக்­க­றை­யாக செயற்படுவதாகவும் குறித்த வீடு­களை புன­ர­மைத்துத்தர தயாராகவுள்­ள­தா­கவும் சவூதி தூதுவர் உறுதியளித்துள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த வீட்டுத் திட்டத்தில் 500 வீடுகள், இரண்டு பாடசாலைகள், பஸ் தரிப்பிடம், வைத்தியசாலை, பள்ளிவாசல்கள் போன்றன காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Vidivelli

No comments:

Post a Comment