ஓட்டமாவடி - நாவலடியில் விபத்து : 63 வயது நபர் மரணம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 7, 2025

ஓட்டமாவடி - நாவலடியில் விபத்து : 63 வயது நபர் மரணம்

(எச்.எம்.எம். பர்ஸான்)

ஓட்டமாவடி - நாவலடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று (08) புதன்கிழமை ஓட்டமாவடி - நாவலடி இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி பகுதியில் இருந்து வயல் வேலைக்காக துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் மீது அவ்வீதியால் வந்த கார் மோதியதில் வயோதிபர் மரணமடைந்துள்ளார்.

இந்த விபத்தில் மரணமடைந்த நபர் ஓட்டமாவடி - 01 மர்கஸ் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 63 வயதுடைய சீனி முஹம்மது முஹம்மது இப்ராஹிம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மரணமடைந்த நபரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment