மைத்திரிக்கு உளவுத்துறை தகவல்கள் கிடைத்தனவா? : சஜின் வாஸிடம் சி.ஐ.டி. விசாரணை - News View

About Us

About Us

Breaking

Thursday, October 9, 2025

மைத்திரிக்கு உளவுத்துறை தகவல்கள் கிடைத்தனவா? : சஜின் வாஸிடம் சி.ஐ.டி. விசாரணை

(எப்.அய்னா)

2019 உயிர்த்த ஞாயிறு பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுக்கு முன்னர் அப்போதைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வெளி­நாட்டு உள­வுத்­து­றை­யி­ட­மி­ருந்து வந்­த­தாகக் கூறப்­படும் தொலை­பேசி அழைப்­புகள் தொடர்­பான விசா­ரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்­பாக வாக்­கு­மூலம் அளிக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்­பினர் சஜின் டி வாஸ் குண­வர்­தன நேற்று (8) காலை குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் (CID) முன் ஆஜ­ரானார்.

இதன்போது சஜின் குண­வர்­தன காலை 9:30 மணி­ய­ளவில் சி.ஐ.டிக்கு வந்து சுமார் மூன்­றரை மணி நேர விசா­ர­ணைக்குப் பிறகு வெளியேறினார்.

இத­னை­ய­டுத்து செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய சஜித் குண­வர்­தன கூறியதா­வது, “ஈஸ்டர் தாக்­கு­தல்கள் குறித்து மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்த கருத்து தொடர்­பாக வாக்­கு­மூலம் அளிக்க சிஐடி என்னை அழைத்­தனர். 

இலங்கை சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளாக, நாங்கள் அவருடன் நெருக்­க­மாக பணி­யாற்­றினோம். எனவே அதன் அடிப்படையில் நான் ஒரு வாக்­கு­மூலம் அளித்தேன், இப்­போது நான் வெளி­யே­று­கிறேன். 

தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணையின் ஒரு பகு­தி­யாக, மைத்ரிபால சிறி­சே­னவைத் தொடர்பு கொண்ட அனைத்து தொலைபேசி எண்­களும் ஆய்வு செய்­யப்­ப­டு­கின்­றன. அந்த எண்களில் ஒன்று நான் பயன்படுத்திய இந்திய எண் இதைச் சரிபார்க்க சி.ஐ.டி. என்னை அழைத்தது.” என்றார்.

No comments:

Post a Comment