மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 7, 2025

மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு

2025ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் மருத்துவம், இயற்பியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது.

ஒக்டோபர் மாதம் என்றாலே நோபல் பரிசு காலம் என்று பொருளாகும், ஆறு நாட்கள், ஆறு பரிசுகள் அறிவிக்கப்படும்.

அந்த வகையில் 2025 ஆண்​டுக்​கான மருத்​து​வத்​துக்​கான நோபல் பரிசு அமெரிக்​காவைச் சேர்ந்த மேரி இ பிரன்​கோவ், ஃப்​ரெட் ராம்​ஸ்​டெல் மற்​றும் ஜப்​பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு பகிர்ந்​தளிக்​கப்​படு​ம் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. 

இது குறித்து ஸ்வீடனின் கரோலின்​ஸ்கா மையத்​தின் நோபல் குழு வெளி​யிட்ட அறி​விப்​பில் கூறிய​தாவது, அமெரிக்​காவைச் சேர்ந்த மேரி இ பிரன்​கோவ், ஃப்​ரெட் ராம்​ஸ்​டெல் மற்​றும் ஜப்​பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோர், உடலின் நோயெ​திர்ப்பு மண்​டலம் பற்றி ஆய்​வில் ஈடு​பட்​டுள்​ளனர். 

இவர்​களது கண்​டு​பிடிப்​பு​கள், புற்று நோய் மற்​றும் நோய்​ எ​திர்ப்​புசக்தி மூலம் சிகிச்சை அளிக்​கும் ஆராய்ச்​சிக்கு வழி​வகுத்​துள்​ளன.

உடலின் சக்​தி​ வாய்ந்த எதிர்ப்பு சக்தி மண்​டலம், ஒழுங்குப்படுத்தப்பட வேண்​டும். இல்​லை​யென்​றால், அது நமது உடல் உறுப்​பு​களையே தாக்​கும் என அவர்​கள் குறிப்​பிட்​டுள்​ளனர். 

இவர்​கள் நவீன நோய்​ தடுப்​பாற்​றலை மாற்​றியமைத்​து, நோய் எதிர்ப்பு மண்​டலத்​தின் பாது​காவலர்​கள், ஒழுங்​கு​முறைபடி செல்​கள் ஆகிய​வற்றை அடை​யாளம் கண்டு புதிய ஆராய்ச்​சிக்கு அடித்தளமிட்​டுள்​ளனர். 

இந்த கண்​டு​பிடிப்​பு​கள், மருத்​துவ பரிசோதனை​கள் மூலம் மதிப்​பீடு செய்​யப்​படும் சிகிச்சை முறை​யின் வளர்ச்​சிக்கு வழி​வகுத்​துள்​ளன. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment