2025ஆம் ஆண்டுக்கான பௌதீகவியல் நோபல் பரிசு மூவருக்கு கூட்டாக வழங்கப்படுவதாக இன்று (07) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜான் கிளார்க், மைக்கேல் ஹெச். டேவோரெட் மற்றும் ஜான் எம். மார்ட்டினிஸ் ஆகிய இந்த மூன்று விஞ்ஞானிகளும், “ஒரு மின்சுற்றில் மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் மெக்கானிக்கல் சுரங்கப்பாதை மற்றும் ஆற்றல் குவாண்டமாக்குதல் ஆகியவற்றை கண்டுபிடித்ததற்காக” இந்த பரிசைப் பெறுகிறார்கள்.
குவாண்டம் மெக்கானிக்ஸ் அனைத்து டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கும் அடித்தளமாக உள்ள நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்பு, குவாண்டம் கணினிகள், குவாண்டம் கிரிப்டோகிராபி உள்ளிட்ட அடுத்த தலைமுறை குவாண்டம் தொழில்நுட்பத்தை உருவாக்க பெரிதும் உதவும் என்று நோபல் குழு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment