‘இஸ்ரேலிய படையினர் ஓய்வெடுக்கும் இடமாக இலங்கை’ ரணிலின் அனுமதியை அநுரவும் தொடர்கிறார் : முஸ்லிம் அரசியல்வாதிகள் மௌனம் என்கிறார் கலாநிதி தயான் ஜயதிலக - News View

About Us

About Us

Breaking

Thursday, May 22, 2025

‘இஸ்ரேலிய படையினர் ஓய்வெடுக்கும் இடமாக இலங்கை’ ரணிலின் அனுமதியை அநுரவும் தொடர்கிறார் : முஸ்லிம் அரசியல்வாதிகள் மௌனம் என்கிறார் கலாநிதி தயான் ஜயதிலக

காஸாவில் மனிதப் படு­கொ­லை­க­ளிலும் இனச்­சுத்­தி­க­ரிப்­பிலும் ஈடுபடும் இஸ்­ரே­லிய படை­யினர் ஓய்­வெ­டுக்­கின்ற மற்றும் பொழுதுபோக்­கு­கின்ற இட­மாக இலங்கை மாறி­யி­ருக்­கி­றது. முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவே இதற்­கான அனுமதியை வழங்­கினார். இப்­போ­தைய ஜனா­தி­பதி அநுரகுமார திசா­நா­யக்­கவும் இதே அனு­ம­தியை தொடர்ந்தும் வழங்கிக் கொண்டி­ருக்­கிறார் என இரா­ஜ­தந்­தி­ரியும், ஜெனீவாவுக்­கான இலங்கையின் முன்னாள் வதி­விடப் பிர­தி­நி­தி­யு­மான கலா­நிதி தயான் ஜய­தி­லக தெரி­வித்தார்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணிகள் சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு நேற்றுமுன்­தினம் (20) கொழும்பு ஜே.ஆர்.ஜய­வர்­தன கலா­சார நிலை­யத்தில் நடை­பெற்­றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்­புரை நிகழ்த்­து­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

முன்னாள் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய பிர­தம அதி­தி­யாக கலந்துகொண்ட இந்­நி­கழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க இஸ்­ரே­லு­ட­னான இலங்­கையின் இரா­ஜ­தந்­திர உற­வு­களை துண்­டித்தார். பலஸ்­தீன விடு­தலை அமைப்பு சுயாட்­சியை பிர­க­ட­னப்­ப­டுத்­தி­ய­போது அதனை முதலில் அங்­கீ­க­ரித்­த­வர்­களில் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­த­னவும் ஒருவர். 

ரண­சிங்க பிரே­ம­தாச ஆட்­சி­யி­லி­ருந்தபோது இஸ்­ரே­லுக்கு ஆத­ர­வாக அமெ­ரிக்கா ஐ.நா.வில் கொண்டுவந்த பிரே­ர­ணைக்கு எதி­ராக இலங்கை வாக்­க­ளித்­தது. இதில் எதிர்த்த 25 நாடு­களுள் இலங்­கையும் ஒன்­றாகும். இவ்­வாறு எதிர்த்த நாடு­களுள் பெரும்­பா­லா­னவை இஸ்லா­மிய நாடு­களும் கம்­யூ­னிச கட்­சி­களால் ஆளப்­பட்ட நாடுகளுமாகும். ஆனால் இந்த இரண்­டி­லி­ருந்தும் வேறு­பட்டு நின்று இதனை எதிர்த்­தது இலங்கை மாத்­தி­ரம்தான். 

அதே­போன்று ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­சவும் பகி­ரங்­க­மா­கவே பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வாக உறு­தி­யாக குரல் கொடுத்த ஒருவர் என்பதை நாம் அறிவோம். இவ்­வா­றுதான் இலங்­கையின் வர­லாற்றில் இஸ்ரேல் தொடர்­பான நிலைப்­பா­டுகள் மாறிமாறி ஆட்­சிக்கு வந்த இரு கட்­சி­க­ளாலும் பின்­பற்­றப்­பட்டு வந்­துள்­ளன. ஆனால் இன்று என்ன நடக்­கி­றது?

இன்று காஸாவில் மனிதப் படு­கொ­லை­க­ளிலும், இனச்சுத்திகரிப்பிலும் ஈடு­படும் இஸ்­ரே­லிய படை­யினர் ஓய்வெடுக்கின்ற மற்றும் பொழு­து­போக்­கு­கின்ற இட­மாக இலங்கை மாறி­யி­ருக்­கி­றது.

மக்­களால் தெரிவு செய்­யப்­ப­டாத ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த ரணில் விக்­ர­ம­சிங்­கவின் காலத்தில் அவரும் அப்­போ­தைய அமைச்சர் மனுஷ நாண­யக்­கா­ரவும் இஸ்­ரே­லி­யர்கள் அறு­கம்­பையில் காலூன்ற அனு­மதி வழங்­கப்­பட்­டது. அதே நிலைப்­பாட்­டையே ஜனா­தி­பதி அநுரகு­மார திசா­நா­யக்­கவும் வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித ஹேரத்தும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றனர்.

யூதர்­களே இல்­லாத இலங்­கையில் ‘சபாத் இல்லம்’ என்று அழைக்கப்படும் அவர்­க­ளது வணக்­க­வ­ழி­பாட்டு மற்றும் பிர­சார நிலை­யங்கள் நிறு­வப்­பட்டு இயங்கி வரு­கின்­றன. அவற்­றுக்கு இலங்கையின் அரச பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் இந்த அர­சாங்கம் என்ன செய்யப்போகி­றது?

1970 கள் மற்றும் 80 களில் எவ்­வாறு இந்த நாட்டின் அர­சியல் தலைவர்கள் இந்த விட­யத்தைக் கையாண்­டார்கள் என்­பதை நாம் பார்க்க வேண்டும். குறிப்­பாக முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் அன்று எவ்­வாறு செயற்­பட்­டார்கள்?

இன்று முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் தலை­மைகள் இந்த விவகாரத்தில் மிகவும் மெள­ன­மாக இருக்­கி­றார்கள். பாராளுமன்றத்திலும் கூட அமை­தி­யா­கவே உள்­ளார்கள். 

கடந்த தசாப்­தங்­களில் முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் தமது சமூகத்தின் வாக்­குப்­ப­லத்தின் ஊடாக அப்­போ­தி­ருந்த அரசாங்கங்களுக்கு அழுத்­தங்­களை வழங்­கி­னார்கள். இதனால் குறித்த அர­சுகள் பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வான நிலைப்­பாட்டை எடுக்கும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டன. ஆனால் இன்று அவ்­வா­றான எந்த அழுத்தங்­களும் வழங்­கப்­ப­டு­வ­தில்லை. அனை­வரும் மெளனம் காக்கி­றார்கள்.

இந்த நாட்டின் இஸ்ரேல் தொடர்­பான நிலைப்­பாட்டில் மாற்­றத்தைக் கொண்டுவர வேண்­டு­மாயின் முதலில் முஸ்லிம் சமூகத்தினுள் இருந்து பலமான குரல்கள் எழுப்பப்பட வேண்டும். அதன் மூலமாக ஏனைய அரசியல் கட்சிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஆதரவைப் பெற வேண்டும். இதன் மூலமே பாரம்பரியமாக இலங்கை முன்னெடுத்து வரும் பலஸ்தீன ஒருமைப்பாட்டு நிலைப்பாட்டை பாதுகாக்க முடியும். 

அதுவே இந்த சந்தர்ப்பத்தில் பலஸ்தீனின் காஸா மக்களுக்கு மனிதாபிமான ரீதியாக நாம் வழங்கும் ஆதரவாக அமைய முடியும் என்றார்.

Vidivelli

No comments:

Post a Comment