ஆட்சியமைக்குமாறு சவால் விடுத்த அரசாங்கமே தற்போது ஓலக்குரல் எழுப்புகிறது : சபையில் முஜிபுர் ரஹ்மான் சாடல் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 22, 2025

ஆட்சியமைக்குமாறு சவால் விடுத்த அரசாங்கமே தற்போது ஓலக்குரல் எழுப்புகிறது : சபையில் முஜிபுர் ரஹ்மான் சாடல்

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் முடிந்தால் ஒரு சபையில் ஆட்சியமைத்­துக்­காட்­டு­மாறு அர­சாங்­கமே எமக்கு சவால் விடுத்­தது. அந்த சவாலை ஏற்­றுக்­கொண்டு செயற்­ப­டும்­போது தற்­போது அரசாங்கம் ஓலக்­குரல் எழுப்பி வரு­கி­றது என ஐக்­கிய மக்கள் சக்தி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் புதன்­கி­ழமை இடம்­பெற்ற நிதிச் சட்­டத்தின் கீழான கட்­ட­ளைகள் மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரையாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில், கொழும்பு மாந­க­ர சபையில் சித­றிய துண்­டு­களை சேர்த்­துக்­கொண்டு ஆட்சியமைப்பதற்கு நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­வ­தாக பிரதி அமைச்சர் ஒருவர் இந்த சபையில் தெரி­வித்­தி­ருந்தார்.

ஆனால் சித­றிய துண்­டு­களை ஜனா­தி­ப­தியின் அலு­வ­ல­கத்­துக்கு அழைத்­து­ வந்­தது யார்? அவர்­களின் வீடு­க­ளுக்கு ஆள் அனுப்பி, குழுக்­களில் தலைமை பதவி வழங்­கு­வ­தா­கவும் மாந­க­ர­ ச­பையில் ஆட்­சி­ய­மைக்க ஆதரவளிக்குமாறு தெரி­வித்­தது யார்? அர­சாங்கம் தெரி­விக்கும் சிதறிய துண்­டு­க­ளையே ஜனா­தி­பதி தனது பெல­வத்த கட்சி காரியால­யத்­துக்கு அழைத்து ஆ­த­ரவை கோரி இருந்தார்.

அதே­நேரம் எமது கொழும்பு மேயர் வேட்­பாளர் அவர்­களின் சிறிய பிள்­ளை­யிடம் தோல்­வி­யுற்­ற­தாக குறித்த பிரதி அமைச்சர் தெரிவித்தி­ருந்தார். அவர் சிறிய பிள்ளை அல்ல. 39 வய­து­டைய இரண்டு பிள்­ளை­களின் தாய். சிறிய பிள்ளை என்றால் 18 வய­துக்கு கீழ்ப்பட்­ட­வ­ராக இருக்க வேண்டும். இவர்கள் இந்த விட­யத்­திலும் பொய்யே பேசு­கி­றார்கள். 

ஆனால் கொழும்பில் சிறுமி ஒரு­வரை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்­பி­ரயோகம் செய்­த விவகாரம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் அமைப்­பா­ள­ருக்கு எதி­ராகவும் குறித்த சிறு­மியின் தாய் பொலிஸில் முறைப்­பாடு செய்­தி­ருக்­கிறார். ஆனால் இது­வரை எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை, உங்­க­ளது அமைப்­பா­ளரின் நடவடிக்­கையால் குறித்த சிறுமி தற்­கொலை செய்து கொண்டிருந்தார். அந்த சிறிய பிள்ளை தொடர்பில் கதைப்­ப­தில்லை.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு உள்­ளூ­ராட்சி மன்ற சட்டம் ஒன்று இருக்­கி­றது. அதா­வது நூற்­றுக்கு 50 வீதத்­துக்கு அதிக வாக்­கு­களை பெறும் கட்சி ஆட்­சி­ய­மைக்­கலாம், அதில் எந்த பிரச்சினையும் இல்லை. 50 வீதத்துக்கு குறை­வாக வாக்­கு­களை பெற்றி­ருந்தால் குறித்த மன்­றத்தில் மேயரை தெரிவு செய்ய வாக்கெடுப்­புக்கு செல்ல வேண்டும். அதுதான் சட்டம். 

அதன் பிரகாரம் அந்த வாக்­கெ­டுப்பில் ஐக்­கிய மக்கள் சக்தி முன்வருகி­றது. அதில் என்ன தவறு? இதனை புரிந்­து­கொள்­ளா­மலே இவர்கள் எப்­ப­டி­யா­வது கொழும்பு மாந­க­ர­ ச­பையில் ஆட்சியமைப்பதாக தெரி­வித்து வந்­தார்கள். ஆனால் தற்­போது சட்டத்தை புரிந்­து­கொண்டு, ஜனா­தி­பதி ஏனை­ய­வர்­களின் ஆத­ரவை பெற்­றுக்­கொள்ள முயற்­சித்து வரு­கிறார்.

இவர்­க­ளைத்­ த­விர அனை­வரும் திரு­டர்கள் என்­றார்கள். சுயா­தீன குழுக்­களில் போட்­டி­யி­டு­ப­வர்­களும் பிர­தான கட்­சி­களில் இருந்த திருடர்கள் என்றே இவர்கள் அன்று தெரி­வித்­தார்கள். தற்­போது அவ்வாறு தெரி­விக்­க­வில்லை என குறிப்­பி­டு­கின்­றனர். இவர்­க­ளுக்கு சாப்­பிட வேண்டும் என்றால் கப­ர­கொ­யா­வையும் உடும்பாக்கிக் கொள்ளும் நிலைப்­பாட்­டிலே இரு­க்கி­றார்கள். ஆட்­சி­ய­மைக்க பெரும்­பான்மை இல்­லா­விட்டால், ஏனை­ய­வர்­களின் ஆத­ரவை பெற்றுக்­கொள்ள வேண்டும். அத­னையே நாங்கள் ஆரம்­பத்தில் இருந்து தெரி­வித்து வந்தோம்.

2017 இல் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் சட்ட திருத்தம் மேற்கொள்ளும்போது, அர­சாங்­கத்­துக்குள் இருந்­து­கொண்டு இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரி­வித்தோம். எதிர்­கா­லத்தில் பிரச்­சினை ஏற்படும் என தெரி­வித்­தி­ருந்தோம். ஆனால் அன்று எதிர்­கட்­சியில் இருந்த தற்­போ­தைய ஜனா­தி­பதி அந்த குழுவில் இருந்தார். இந்த திருத்­தத்தை மேற்­கொள்ள அவரும் ஆத­ர­வ­ளித்தார். இந்த முறைமை எதிர்க்­கட்­சிக்கு சாத­க­மாக இருப்­பதால், அன்று ஜனா­தி­பதி இதற்கு ஆத­ர­வ­ளித்தார். தற்­போது ஆளும் கட்­சிக்கு வந்­த­போது, இந்த சட்டத்தில் அநீதி இருப்­பதை புரிந்­து­கொண்டு, சட்­டத்தை திருத்த வேண்டும் என தெரி­விக்­கிறார். இதுதான் இவர்­களின் நிலைப்­பாடு.

ஆட்­சிக்கு வந்­த­துடன் கட்சி மாறு­வ­தற்கு எதி­ராக முத­லா­வ­தாக சட்டம் கொண்டுவருவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது எதிர்க்கட்சியில் இருந்து உறுப்பினர்களை எடுத்துக்கொள்ளும் நடவடிக்கையில் ஜனாதிபதி ஈடுபட்டு வருகிறார். சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் நாங்கள் சவால் விடவில்லை. அரசாங்கமே எமக்கு சவால் விட்டது. தற்போது நாங்கள் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு ஆட்சியமமைக்க முயற்சிகளை மேற்கொள்ளும்போது இவர்கள் ஓலக்குரல் விடுகின்றனர் என்றார்.

Vidivelli

No comments:

Post a Comment