பயணிகளுடன் சென்ற பஸ்ஸில் கழன்றோடிய சக்கரம் : 4 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 14, 2025

பயணிகளுடன் சென்ற பஸ்ஸில் கழன்றோடிய சக்கரம் : 4 பேர் காயம்

நுவரெலியாவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றின், சக்கரம் கழன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 4 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர். 

நுவரெலியா - வலப்பனை பிரதான வீதியிலுள்ள மஹா ஊவா வளைவு பகுதியில் நேற்றுமுன்தினம் (13) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற இந்த பஸ், மட்டக்களப்புக்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தபோது, பஸ்ஸின் முன் இடது சக்கரம் கழன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியின் இடதுபுறத்திலுள்ள மலையில் மோதி நின்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

No comments:

Post a Comment