உப்பு இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை உப்பை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் உபுல்மலீ பிரேமதிலக்க தெரிவித்தார்.
உப்பு இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் தேவையில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் அனுமதி பெற்ற எந்தவொரு இறக்கமதியாளருக்கும் உப்பை இறக்குமதி செய்வதற்கு முடியும் என உபுல்மலீ பிரேமதிலக்க கூறினார்.
அத்துடன் அயடீன் கலக்காத மற்றும் அயடீன் கலந்த உப்பை இறக்குமதி செய்ய முடியும் எனவும் இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் உபுல்மலீ பிரேமதிலக்க தெரிவித்தார்.
உணவுக்கு பயன்படுத்தப்படும் 250 மெற்றிக் தொன் மேசை உப்பு இன்று (20) நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக வரத்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க கூறினார்.
இன்றையதினம் 10 உப்பு கொள்கலன்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment