விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி, சஷி பிரபா ரத்வத்த மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் வாகனம் ஒன்றை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவி, சஷி பிரபா ரத்வத்தேவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நுகேகொட நீதவான் நீதிமன்றில் அவரை இன்று (22) முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18ஆம் திகதி லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இருவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
அதன்படி, லொஹான் ரத்வத்தவை டிசம்பர் மாதம் 02ஆம் திகதி வரையிலும், அவரது மனைவியை நவம்பர் மாதம் 22ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று லொஹான் ரத்வத்தவின் மனைவியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது மீணடும் விளக்கமறியிலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்படாத சொகுசு கார் ஒன்றை வைத்திருந்தமை தொடர்பான வழக்கில் லொஹான் ரத்வத்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன் அவரது மனைவி சஷி பிரபா ரத்வத்த நவம்பர் மாதம் 4ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment