ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் அரசியலமைப்பின் 2 சரத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ள வருடங்களின் எண்ணிக்கையை திருத்தியமைப்பதற்காக அரசியலமைப்பு திருத்த சட்டமூலமொன்றை தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த யோசனை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று (09) முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 30 (2) சரத்தில் ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 62 (2) சரத்திற்கமைய, பாராளுமன்றத்தின் பதவிக் காலம் 5 வருடங்களாகும்.
எனினும் அரசியலமைப்பின் 83 (b) சரத்தில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் 6 வருடங்களை விட அதிகமாக நீடிக்கப்படுமாயின், அதற்காக முன்வைக்கப்படும் சட்டமூலத்திற்காக சர்வஜன வாக்கெடுப்பு அவசியமென குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை 6 வருடங்களுக்கு மேல் நீடிப்பதற்காக முன்மொழியப்படும் பிரேரணைக்கு, சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என அரசியலமைப்பின் 83-ஆ பிரிவு கூறுகின்றது.
இந்த 2 சரத்துகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள பதவிக் காலத்தை 5 வருடங்களாக மாற்றுவதற்கு, உரிய சட்டமூலத்தை முன்வைப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment