நல்லூரில் அமைந்துள்ள மந்திரி மனைக்குள் நுழைய வேண்டாம் என்ற அறிவித்தல் தொல்பொருள் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரி மனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் உள்ளது. அதற்கு முட்டுக் கொடுத்து கம்பிகள் நாடப்பட்டுள்ளன. இதனால் அதற்குள் யாரையும் நுழைய வேண்டாம் என்று தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment