பேராதனை பல்கலைகழக மற்றுமொரு மாணவன் காணாமல் போயுள்ளார் ! - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 4, 2022

பேராதனை பல்கலைகழக மற்றுமொரு மாணவன் காணாமல் போயுள்ளார் !

பேராதனை பல்கலைகழகத்தின் மற்றுமொரு மாணவன் காணாமல் போயுள்ளதை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

பொறியல் பீடத்தின் நான்காம் வருட மாணவனே காணாமல் போயுள்ளான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவன் நேற்று காலை 8 மணிக்கு அங்கிருந்து சென்ற பின்னர் திரும்பவில்லை அவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தான் கடும் மன அழுத்தத்தில் உள்ளதாகவும் சில காலம் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து விலகியிருக்க விரும்புவதாகவும் கடிதமொன்றை எழுதியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த 25 வயதான புலஸ்தி பிரமுதித் பெரேரா என்ற மாணவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

நேற்று (03) காலை முதல் குறித்த மாணவர் காணாமல் போயுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த குறித்த மாணவனை கடந்த 02ஆம் திகதியே இறுதியாக கண்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment