பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக உள்ளிட்ட 13 சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் ஜூன் 08 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 09 இல் கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பி.க்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக ஆகியோர் கடந்த மே 17ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்தேகநபர்கள் இன்று (01) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகள் ஆகியோர் முன்வைத்த சமர்ப்பணங்கள் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கைகளை பரிசீலித்த நீதவான் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியலை நீடிக்கும் உத்தரவை வழங்கினார்.
No comments:
Post a Comment