எரிபொருள் விநியோகம் குறித்து லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் விசேட அறிவிப்பு : இன்று முதல் அமுல் - News View

About Us

About Us

Breaking

Friday, May 20, 2022

எரிபொருள் விநியோகம் குறித்து லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் விசேட அறிவிப்பு : இன்று முதல் அமுல்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களின் எரிபொருள் தாங்கிக்கு மாத்திரமே பெற்றோல் விநியோகிக்கப்படும் என லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்நடைமுறை அமுலுக்குவருவதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கலன்கள், பீப்பாய்கள், போத்தல்களில் பெற்றோல் விற்பனை செய்யப்படாது என நிறுவனம் அதில் தெரிவித்துள்ளது.

பொதுமக்களினதும் சொத்துகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.

இதேவேளை, க.பொ. சாதாரண தரப் பரீட்சை கடமைகளுக்கு செல்லவுள்ள அதிகாரிகளின் நலன்கருதி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22) பிற்பகல் 3.00 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment