இலங்கை சட்டத்தரணிகள் சங்க பரிந்துரைகளுக்கமைய ஆதரவளிக்க தயார் : அறிக்கை வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி - News View

About Us

Add+Banner

Breaking

  

Saturday, May 7, 2022

demo-image

இலங்கை சட்டத்தரணிகள் சங்க பரிந்துரைகளுக்கமைய ஆதரவளிக்க தயார் : அறிக்கை வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி

SJB-Bar%20Association%20of%20Sri%20Lanka%20(Small)
நாட்டில் நிலவும் நெருக்கடியை தீர்ப்பதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த ஆலோசனை கோவையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள தேசிய வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பதவியில் உள்ள ஜனாதிபதியை பதவியிலிருந்து விலகுவது தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கும் வேலைத்திட்டம் மற்றும் நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணுதல் ஆகியன அடிப்படை அவசியமான விடயமாக கருதப்படுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கி, பொருளாதார நிலைத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு, இந்நெருக்கடியை தீர்ப்பது தொடர்பான தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு தனது ஒத்துழைப்பை வழங்க தீர்மானித்துள்ளதாக குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20220507_200031%20(Small)

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *