முப்படைகளிலிருந்தும் கடந்த காலங்களில் தப்பியோடிய 2,983 பேரைக் கைது செய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டிருந்த நடவடிக்கைகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட படை வீரர்களில் இராணுவத்தைச் சேர்ந்த 2,261 பேர், கடற்படையைச் சேர்ந்த 194 பேர் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 198 பேரும் உள்ளடங்குவதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், பொலிஸ் துறையிலிருந்து தப்பியோடிய 330 பேரும் கைதானவர்களில் உள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment