சம்பள நிலுவை, கொடுப்பனவுகளை கோரி ரிட் மனு தாக்கல் செய்த வைத்தியர் ஷாபி : பிரதிவாதிகள் சார்பில் கால அவகாசம் கோரிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் - News View

About Us

Add+Banner

Friday, February 11, 2022

demo-image

சம்பள நிலுவை, கொடுப்பனவுகளை கோரி ரிட் மனு தாக்கல் செய்த வைத்தியர் ஷாபி : பிரதிவாதிகள் சார்பில் கால அவகாசம் கோரிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரால்

.com/img/a/
(எம்.எப்.எம்.பஸீர்)

சட்ட விரோதமாக கருத்தடை செய்ததாக பொய்யான குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட தனக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவை மற்றும் கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க உத்தரவிடுமாறு கோரி குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி மேன் முறையீட்டு நீதிமன்றில் எழுத்தாணை (ரிட்) மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெந்தன்கமுவ, அவ்வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எம்.எஸ். வீரபண்டார, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் செயலர் மேஜர் ஜெனரல் வைத்தியர் எஸ்.எம். முணசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோர் இம்மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இம்மனுவானது நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டது.

இதன்போது மனுதாரரனா வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன ஆஜராகிய நிலையில், பிரதிவாதிகளுக்காக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் சுமதி தர்மவர்தன ஆஜரானார்.

அதன்படி, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் சுமதி தர்மவர்தன, 'இம்மனு தொடர்பிலான ஆவணங்கள் எனக்கு நேற்றே (9 ஆம் திகதி நேற்று முன்தினம்) கிடைத்தது. அவற்றை படித்து ஆராய சிறிது கால அவகாசம் தேவை. எனவே அதற்கான அவகாசத்தை தருமாறு கோருகிறேன்' என கால அவகாசம் கோரி கோரிக்கை முன் வைத்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட மேன் முறையீட்டு நீதிமன்றம் இந்த ரிட் மனுவை எதிர்வரும் 17 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தது.

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியராக தான் சேவையாற்றியதாகவும், இதன்போது சட்ட விரோத கருத்தடை தொடர்பில் ஆதரமற்ற அடிப்படை குற்றச்சாட்டுக்களை முன் வைத்து தான் கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறான நிலையில் தனக்கு கிடைக்க வேண்டிய சம்பள நிலுவை மற்றும் கொடுப்பனவுகள் கிடைக்கவில்லை எனவும் அவற்றை செலுத்த உடனடியாக பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் இந்த மனுவூடாக கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *